திருவருட்பா  124. பெரு வழக்கு

இவர்க்கும்  எனக்கும்பெரு  வழக்கிருக்  கின்றதது 
என்றும்  தீரா  வழக்குக்  காண  டி. 
1
எவர்க்கும்  பெரியவர்பொன்  னம்பலத்  தேநடம் 
இட்டார்  எனக்குமாலை  இட்டார்  இதோவந்தார்.  இவர்க்கும் 
2
அன்றிதோ  வருகின்றேன்  என்று  போனவர்அங்கே 
யார்செய்த  தடையாலோ  இருந்தார்என்  கையிற்சங்கை 
இன்றுதம்  கையிற்கொண்டே  வந்துநிற்  கின்றார்இங்கே 
இந்தக்  கதவைமூடு  இவர்போவ  தினிஎங்கே.  இவர்க்கும் 
3
அவரவர்  உலகத்தே  அறிந்தலர்  தூற்றப்பட்டேன் 
அன்றுபோ  னவர்இன்று  வந்துநிற்  கின்றார்கெட்டேன் 
இவர்சூதை  அறியாதே  முன்னம்  ஏமாந்துவிட்டேன் 
இந்தக்  கதவைமூடு  இனிஎங்கும்  போகஒட்டேன்.  இவர்க்கும் 
4
சின்ன  வயதில்என்னைச்  சேர்ந்தார்புன்  னகையோடு 
சென்றார்  தயவால்இன்று  வந்தார்  இவர்க்கார்ஈடு 
என்னைவிட்  டினிஇவர்  எப்படிப்  போவார்ஓடு 
இந்தக்  கதவைமூடு  இரட்டைத்தாட்  கோலைப்போடு.  இவர்க்கும் 
5
இவர்க்கும்  எனக்கும்பெரு  வழக்கிருக்  கின்றதது 
என்றும்  தீரா  வழக்குக்  காண  டி. 
6

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com