
வெம்பு முயிருக் கோருறவாய் வேளை நமனும் வருவானேல்
தம்பி தமையன் துணையாமோ தனையர் மனைவி வருவாரோ
உம்பர் பரவுந் திருத்தணிகை உயர்மா மலைமே லிருப்பவர்க்குத்
தும்பைக் குடலை எடுக்காமல் துக்க வுடலை எடுத்தேனே.
தொல்லைக் குடும்பத் துயரதனில் தொலைத்தே னந்தோ காலமெலாம்
அல்ல லகற்றிப் பெரியோரை யடுத்து மறியேன் அரும்பாவி
செல்லத் தணிகைத் திருமலைவாழ் தேவா உன்றன் சந்நிதிக்கு
வில்வக் குடலை எடுக்காமல் வீணுக் குடலை எடுத்தேனே.
அவல வயிற்றை வளர்ப்பதற்கே அல்லும் பகலும் அதினினைவாய்க்
கவலைப் படுவ தன்றிசிவ கனியைச் சேரக் கருதுகிலேன்
திவலை யொழிக்குந் திருத்தணிகைத் திருமால் மருகன் திருத்தாட்குக்
குவளைக் குடலை எடுக்காமற் கொழுத்த வுடலை எடுத்தேனே.



