திருவருட்பா  54. திருப்பள்ளித்தாமம் தாங்கல்

வெம்பு  முயிருக்  கோருறவாய்  வேளை  நமனும்  வருவானேல் 
தம்பி  தமையன்  துணையாமோ  தனையர்  மனைவி  வருவாரோ 
உம்பர்  பரவுந்  திருத்தணிகை  உயர்மா  மலைமே  லிருப்பவர்க்குத் 
தும்பைக்  குடலை  எடுக்காமல்  துக்க  வுடலை  எடுத்தேனே. 
1
தொல்லைக்  குடும்பத்  துயரதனில்  தொலைத்தே  னந்தோ  காலமெலாம் 
அல்ல  லகற்றிப்  பெரியோரை  யடுத்து  மறியேன்  அரும்பாவி 
செல்லத்  தணிகைத்  திருமலைவாழ்  தேவா  உன்றன்  சந்நிதிக்கு 
வில்வக்  குடலை  எடுக்காமல்  வீணுக்  குடலை  எடுத்தேனே. 
2
அவல  வயிற்றை  வளர்ப்பதற்கே  அல்லும்  பகலும்  அதினினைவாய்க் 
கவலைப்  படுவ  தன்றிசிவ  கனியைச்  சேரக்  கருதுகிலேன் 
திவலை  யொழிக்குந்  திருத்தணிகைத்  திருமால்  மருகன்  திருத்தாட்குக் 
குவளைக்  குடலை  எடுக்காமற்  கொழுத்த  வுடலை  எடுத்தேனே. 
3

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com