திருவருட்பா  35. கையடை முட்டற் கிரங்கல்

கார்பூத்த  கண்டத்  தொடுமேவு  முக்கட்  கனிகனிந்து 
சீர்பூத்  தொழுகுசெந்  தேனே  தணிகையில்  தெள்அமுதே 
பேர்பூத்த  ஒற்றியில்  நின்முன்னர்  ஏற்றிடப்  பேதையனேன் 
ஏர்பூத்த  ஒண்பளி  தம்  காண்  கிலன்அதற்  கென்செய்வனே. 
1
கருமருந்  தாய  மணிகண்ட  நாயகன்  கண்மணியாம் 
அருமருந்  தேதணி  காசலம்  மேவும்என்  ஆருயிரே 
திருமருங்  கார்ஒற்றி  யூர்மே  வியநின்  திருமுன்னராய் 
ஒருமருங்  கேற்றஎன்  செய்கேன்  கற்பூர  ஒளியினுக்கே. 
2
பால்எடுத்  தேத்தும்நற்  பாம்பொடு  வேங்கையும்  பார்த்திடஓர் 
கால்எடுத்  தம்பலத்  தாடும்  பிரான்திருக்  கண்மணியே 
வேல்எடுத்  தோய்தென்  தணிகா  சலத்தமர்  வித்தகநின் 
பால்எடுத்  தேற்றக்  கிடைக்குங்  கொலோவெண்  பளிதம்எற்கே. 
3
கண்ணப்பன்  என்னும்  திருப்பெய  ரால்உல  கம்புகழும் 
திண்ணப்பன்  ஏத்தும்  சிவனார்  மகனுக்குத்  தெண்டன்இட்ட 
விண்ணப்பம்  ஒன்றிந்த  மேதினி  மாயையில்  வீழ்வதறுத் 
தெண்ணப்  படும்நின்  திருவருள்  ஈகஇவ்  வேழையற்கே. 
4

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com