திருவருட்பா  36. அடியார்பணி அருளவேண்டல்

எப்பா  லவரும்  இறைஞ்சும்  தணிகை  இருந்தருள்என் 
அப்பாஉன்  பொன்னடிக்  கென்நெஞ்  சகம்இட  மாக்கிமிக்க 
வெப்பான  நஞ்சன  வஞ்சகர்  பாற்செலும்  வெந்துயர்நீத் 
திப்பாரில்  நின்அடி  யார்க்கேவல்  செய்ய  எனக்கருளே. 
1
எய்யா  தருள்தணி  காசலம்  மேவிய  என்அருமை 
ஐயா  நினது  திருவடி  ஏத்திஅன்  றோஅயனும் 
செய்யாள்  மருவும்  புயனுடைத்  தேவனும்  சேணவனும் 
நையாத  ஆயுளும்  செல்வமும்  வண்மையும்  நண்ணினரே. 
2
வாளாருங்  கண்ணியர்  மாயையை  நீக்கி  மலிகரணக் 
கோளாகும்  வாதனை  நீத்துமெய்ஞ்  ஞானக்  குறிகொடுநின் 
தாளாகும்  நீழல்  அதுசார்ந்து  நிற்கத்  தகுந்ததிரு 
நாளாகும்  நாள்எந்த  நாள்அறி  யேன்தணி  காசலனே. 
3
ஊன்பார்க்கும்  இவ்வுடற்  பொய்மையைத்  தேர்தல்  ஒழிந்தவமே 
மான்பார்க்கும்  கண்ணியர்  மையலில்  வீழும்  மயக்கம்அற்றே 
தேன்பார்க்கும்  சோலைத்  தணிகா  சலத்துன்  திருஅழகை 
நான்பார்க்கும்  நாள்எந்த  நாள்மயில்  ஏறிய  நாயகனே. 
4
என்னே  குறைநமக்  கேழைநெஞ்  சேமயில்  ஏறிவரும் 
மன்னே  எனநெடு  மாலும்  பிரமனும்  வாழ்த்திநிற்கும் 
தன்னேர்  தணிகைத்  தடமலை  வாழும்நற்  றந்தைஅருள் 
பொன்னேர்  திருவடிப்  போதுகண்  டாய்நம்  புகலிடமே. 
5
பேதைநெஞ்  சேஎன்றன்  பின்போந்  திடுதிஇப்  பேயுலக 
வாதைஅஞ்  சேல்பொறி  வாய்க்கலங்  கேல்இறை  யும்மயங்கேல் 
போதையெஞ்  சேல்தணி  காசலம்  போய்அப்  பொருப்பமர்ந்த 
தாதைஅஞ்  சேவடிக்  கீழ்க்குடி  யாகத்  தயங்குவமே. 
6

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com