திருவருட்பா  26. பணித்திறஞ் சாலாமை

வஞ்சகப்  பேதையர்  மயக்கில்  ஆழ்ந்துழல் 
நெஞ்சகப்  பாவியேன்  நினைந்தி  லேன்ஐயோ 
வெஞ்சகப்  போரினை  விட்டு  ளோர்புகழ் 
தஞ்சகத்  தணிகைவாழ்  தரும  வானையே. 
1
வான்நிகர்  கூந்தலார்  வன்க  ணால்மிக 
மால்நிகழ்  பேதையேன்  மதித்தி  லேன்  ஐயோ 
தான்இரும்  புகழ்கொளும்  தணிகை  மேல்அருள் 
தேன்இருந்  தொழுகிய  செங்க  ரும்பையே. 
2
கருங்கடு  நிகர்நெடுங்  கண்ணி  னார்மயல் 
ஒருங்குறு  மனத்தினேன்  உன்னி  லேன்ஐயோ 
தரும்புகழ்  மிகுந்திடுந்  தணிகை  மாமலை 
மருங்கமர்ந்  தன்பருள்  மன்னும்  வாழ்வையே. 
3
வைவளர்  வாட்கணார்  மயக்கில்  வீழ்ந்தறாப் 
பொய்வளர்  நெஞ்சினேன்  போற்றி  லேன்ஐயோ 
மெய்வளர்  அன்பர்கள்  மேவி  ஏத்துறும் 
செய்வளர்  தணிகையில்  செழிக்கும்  தேனையே. 
4
செழிப்படும்  மங்கையர்  தீய  மாயையில் 
பழிப்படும்  நெஞ்சினேன்  பரவி  லேன்ஐயோ 
வழிப்படும்  அன்பர்கள்  வறுமை  நீக்கியே 
பொழிற்படும்  தணிகையில்  பொதிந்த  பொன்னையே. 
5
பொதிதரும்  மங்கையர்  புளகக்  கொங்கைமேல் 
வதிதரும்  நெஞ்சினேன்  மதித்தி  லேன்ஐயோ 
மதிதரும்  அன்பர்தம்  மனத்தில்  எண்ணிய 
கதிதரும்  தணிகைவாழ்  கற்ப  கத்தையே. 
6

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com