திருவருட்பா  9. வியப்பு மொழி

மாதர்  மணியே  மகளேநீ  வாய்த்த  தவந்தான்  யாதறியேன் 
வேதர்  அனந்தர்  மால்அனந்தர்  மேவி  வணங்கக்  காண்பரியார் 
நாதர்  நடன  நாயகனார்  நல்லோர்  உளத்துள்  நண்ணுகின்றோர் 
கோதர்  அறியாத்  தியாகர்தமைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
1
திருவில்  தோன்றும்  மகளேநீ  செய்த  தவந்தான்  யார்அறிவார் 
மருவில்  தோன்றும்  கொன்றையந்தார்  மார்பர்  ஒற்றி  மாநகரார் 
கருவில்  தோன்றும்  எங்கள்உயிர்  காக்க  நினைத்த  கருணையினார் 
குருவிற்  றோன்றும்  தியாகர்தமைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
2
என்னா  ருயிர்போல்  மகளேநீ  என்ன  தவந்தான்  இயற்றினையோ 
பொன்னார்  புயனும்  மலரோனும்  போற்றி  வணங்கும்  பொற்பதத்தார் 
தென்னார்  ஒற்றித்  திருநகரார்  தியாகர்  எனும்ஓர்  திருப்பெயரார் 
கொன்னார்  சூலப்  படையவரைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
3
சேலை  நிகர்கண்  மகளேநீ  செய்த  தவந்தான்  செப்பரிதால் 
மாலை  அயனை  வானவரை  வருத்தும்  படிக்கு  மதித்தெழுந்த 
வேலை  விடத்தை  மிடற்றணிந்தார்  வீட்டு  நெறியாம்  அரசியற்செங் 
கோலை  அளித்தார்  அவர்தம்மைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
4
தேனேர்  குதலை  மகளேநீ  செய்த  தவந்தான்  எத்தவமோ 
மானேர்  கரத்தார்  மழவிடைமேல்  வருவார்  மருவார்  கொன்றையினார் 
பானேர்  நீற்றர்  பசுபதியார்  பவள  வண்ணர்  பல்சடைமேல் 
கோனேர்  பிறையார்  அவர்தம்மைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
5
வில்லார்  நுதலாய்  மகளேநீ  மேலை  நாட்செய்  தவம்எதுவோ 
கல்லார்  உள்ளம்  கலவாதார்  காமன்  எரியக்  கண்விழித்தார் 
வில்லார்  விசையற்  கருள்புரிந்தார்  விளங்கும்  ஒற்றி  மேவிநின்றார் 
கொல்லா  நெறியார்  அவர்தம்மைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
6
அஞ்சொற்  கிளியே  மகளேநீ  அரிய  தவமே  தாற்றினையோ 
வெஞ்சொற்  புகலார்  வஞ்சர்தமை  மேவார்  பூவார்  கொன்றையினார் 
கஞ்சற்  கரியார்  திருஒற்றிக்  காவல்  உடையார்  இன்மொழியால் 
கொஞ்சத்  தருவார்  அவர்தம்மைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
7
பூவாய்  வாட்கண்  மகளேநீ  புரிந்த  தவந்தான்  எத்தவமோ 
சேவாய்  விடங்கப்  பெருமானார்  திருமால்  அறியாச்  சேவடியார் 
காவாய்ந்  தோங்கும்  திருஒற்றிக்  காவல்  உடையார்  எவ்வௌர்க்கும் 
கோவாய்  நின்றார்  அவர்தம்மைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
8
மலைநேர்  முலையாய்  மகளேநீ  மதிக்கும்  தவமே  தாற்றினையோ 
தலைநேர்  அலங்கல்  தாழ்சடையார்  சாதி  அறியாச்  சங்கரனார் 
இலைநேர்  தலைமுன்  றொளிர்படையார்  எல்லாம்  உடையார்  எருக்கின்மலர்க் 
குலைநேர்  சடையார்  அவர்தம்மைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
9
மயிலின்  இயல்சேர்  மகளேநீ  மகிழ்ந்து  புரிந்த  தெத்தவமோ 
வெயிலின்  இயல்சேர்  மேனியினார்  வெண்  றுடையார்  வெள்விடையார் 
பயிலின்  மொழியாள்  பாங்குடையார்  பணைசூழ்  ஒற்றிப்  பதிஅமர்ந்தார் 
குயிலிற்  குலவி  அவர்தம்மைக்  கூடி  உடலம்  குளிர்ந்தனையே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com