திருவருட்பா  1. திரு உலாப் பேறு

சீரார்  வளஞ்சேர்  ஒற்றிநகர்த்  தியாகப்  பெருமான்  பவனிதனை 
ஊரா  ருடன்சென்  றெனதுநெஞ்சம்  உவகை  ஓங்கப்  பார்த்தனன்காண் 
வாரார்  முலைகண்  மலைகளென  வளர்ந்த  வளைகள்  தளர்ந்தனவால் 
ஏரார்  குழலாய்  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
1
சீர்த்தேன்  பொழிலார்  ஒற்றிநகர்த்  தியாகப்  பெருமான்  பவனிவரப் 
பார்த்தேன்  கண்கள்  இமைத்திலகாண்  பைம்பொன்  வளைகள்  அமைத்திலகாண் 
தார்த்தேன்  குழலும்  சரிந்தனகாண்  தானை  இடையிற்  பிரிந்தனகாண் 
ஈர்த்தேன்  குழலாய்  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
2
சீதப்  புனல்சூழ்  வயல்ஒற்றித்  தியாகப்  பெருமான்  திருமாட 
வீதிப்  பவனி  வரக்கண்டேன்  மென்பூந்  துகில்வீழ்ந்  ததுகாணேன் 
போதிற்  றெனவும்  உணர்ந்திலேன்  பொன்ன  னார்பின்  போதுகிலேன் 
ஈதற்  புதமே  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
3
தென்னார்  சோலைத்  திருஒற்றித்  தியாகப்  பெருமான்  பவனிவரப் 
பொன்னார்  வீதி  தனிற்பார்த்தேன்  புளகம்  போர்த்தேன்  மயல்பூத்தேன் 
மின்னார்  பலர்க்கும்  முன்னாக  மேவி  அவன்றன்  எழில்வேட்டு 
என்னார்  அணங்கே  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
4
சீலக்  குணத்தோர்  புகழ்ஒற்றித்  தியாகப்  பெருமான்  பவனிஇராக் 
காலத்  தடைந்து  கண்டேன்என்  கண்கள்  இரண்டோ  ஆயிரமோ 
ஞாலத்  தவர்கள்  அலர்தூற்ற  நற்று‘  சிடையில்  நழுவிவிழ 
ஏலக்  குழலாய்  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
5
சேயை  அருளுந்  திருஒற்றித்  தியாகப்  பெருமான்  வீதிதனில் 
தூய  பவனி  வரக்கண்டேன்  சூழ்ந்த  மகளிர்  தமைக்காணேன் 
தாயை  மறந்தேன்  அன்றியும்என்  தனையும்  மறந்தேன்  தனிப்பட்டேன் 
ஏயென்  தோழி  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
6
திங்கள்  உலவும்  பொழில்ஒற்றித்  தியாகப்  பெருமான்  திருவீதி 
அங்கண்  களிக்கப்  பவனிவந்தான்  அதுபோய்க்  கண்டேன்  தாயரெலாம் 
தங்கள்  குலத்துக்  கடாதென்றார்  தம்மை  விடுத்தேன்  தனியாகி 
எங்கண்  அனையாய்  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
7
தேசார்  மணிசூழ்  ஒற்றிநகர்த்  தியாகப்  பெருமான்  பவனிவரக் 
கூசா  தோடிக்  கண்டரையில்  கூறை  இழந்தேன்  கைவளைகள் 
வீசா  நின்றேன்  தாயரெலாம்  வீட்டுக்  கடங்காப்  பெண்எனவே 
ஏசா  நிற்க  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
8
தேடார்க்  கரியான்  ஒற்றிநகர்த்  தியாகப்  பெருமான்  பவனிவரத் 
தோடார்  பணைத்தோட்  பெண்களொடும்  சூழ்ந்து  மகிழ்ந்து  கண்டதன்றி 
வாடாக்  காதல்  கொண்டறியேன்  வளையும்  துகிலும்  சேர்ந்ததுடன் 
ஏடார்  கோதை  என்னடிநான்  இச்சை  மயமாய்  நின்றதுவே. 
9
திருமாற்  கரியான்  ஒற்றிநகர்த்  தியாகப்  பெருமான்  பவனிவரப் 
பெருமான்  மனமு  நானும்முன்னும்  பின்னும்  சென்று  கண்டேமால் 
பொருமா  நின்றேன்  தாயரெலாம்  போஎன்  றீர்க்கப்  போதுகிலேன் 
இருண்மாண்  குழலாய்  என்னடிநான்  இச்சைமயமாய்  நின்றதுவே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com