திருவருட்பா  19. அருள்விடை வேட்கை

போகம்  கொண்ட  புணர்முலை  மாதொரு 
பாகம்  கொண்ட  படம்பக்க  நாதரே 
மாகம்  கொண்ட  வளம்பொழில்  ஒற்றியின் 
மோகம்  கொண்டஎம்  முன்நின்  றருளிரோ. 
1
தவள  நீற்றுமெய்ச்  சாந்தவி  னோதரே 
பவள  மேனிப்  படம்பக்க  நாதரே 
கவள  வீற்றுக்  கரிஉரி  போர்த்தநீர் 
இவளை  ஒற்றிவிட்  டெங்ஙனம்  சென்றிரோ. 
2
சீல  மேவித்  திகழ்அனல்  கண்ஒன்று 
பால  மேவும்  படம்பக்க  நாதரே 
ஞால  மேவும்  நவையைஅ  கற்றமுன் 
ஆலம்  உண்டவர்  அல்லிர்கொல்  ஐயரே. 
3
உடைகொள்  கோவணத்  துற்றஅ  ழகரே 
படைகொள்  சூலப்  படம்பக்க  நாதரே 
கடைகொள்  நஞ்சுண்டு  கண்டம்க  றுத்தநீர் 
இடையில்  ஒற்றிவிட்  டெங்ஙனம்  சென்றிரோ. 
4
நிறைய  வாழ்தொண்டர்  நீடுற  வன்பவம் 
பறைய  நின்றப  டம்பக்க  நாதரே 
உறைய  மாணிக்கு  யிர்  அளித்  திட்டநீர் 
குறையி  லாஒற்றிக்  கோயிற்கண்  உள்ளிரோ. 
5
வணங்கொள்  நாகம  ணித்தலை  ஐந்துடைப் 
பணங்கொள்  செல்வப்ப  டம்பக்க  நாதரே 
கணங்கொள்  காமனைக்  காய்ந்துயிர்  ஈந்தநீர் 
வணங்கு  வார்க்கென்கொல்  வாய்திற  வாததே. 
6
நாட  நல்இசை  நல்கிய  மூவர்தம் 
பாடல்  கேட்கும்ப  டம்பக்க  நாதரே 
வாடல்  என்றொரு  மாணிக்  களித்தநீர் 
ஈடில்  என்னள  வெங்கொளித்  திட்டிரோ. 
7
சுலவு  காற்றனல்  தூயமண்  விண்புனல் 
பலவு  மாகும்ப  டம்பக்க  நாதரே 
நிலவு  தண்மதி  நீள்முடி  வைத்தநீர் 
குலவும்  என்றன்கு  றைதவிர்க்  கீர்கொலோ. 
8
அடியர்  நெஞ்சத்த  ருட்பெருஞ்  சோதிஓர் 
படிவ  மாகும்ப  டம்பக்க  நாதரே 
நெடிய  மாலுக்கு  நேமி  அளித்தநீர் 
மிடிய  னேன்அருள்  மேவ  விரும்பிரோ. 
9
மதிகொள்  அன்பர்ம  னமெனும்  திவ்வியப் 
பதிகொள்  செல்வப்ப  டம்பக்க  நாதரே 
விதிகொள்  துன்பத்தை  வீட்டி  அளித்தநீர் 
துதிகொள்  வீர்என்து  யரைத்து  ரத்துமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com