திருவருட்பா  83. மங்களம்

புங்கவர்  புகழுமாதங்கமு  கந்திகழ் 
எங்கள்  கணேசராந்  துங்கற்கு  -  மங்களம். 
1
போதந்  திகழ்பர  நாதந்  தனில்நின்ற 
நீதராஞ்  சண்முக  நாதற்கு  -  மங்களம். 
2
பூசைசெய்  வாருளம்  ஆசைசெய்  வார்தில்லை 
ஈசர்  எமதுநட  ராஜற்கு  -  மங்களம். 
3
பூமி  புகழ்குரு  சாமி  தனைஈன்ற 
வாமி  எனுஞ்சிவ  காமிக்கு  -  மங்களம். 
4
புங்கமி  குஞ்செல்வந்  துங்கமு  றத்தரும் 
செங்க  மலத்திரு  மங்கைக்கு  -  மங்களம். 
5
பூணி  லங்குந்தன  வாணி  பரம்பர 
வாணி  கலைஞர்கொள்  வாணிக்கு  -  மங்களம். 
6
புண்ணிய  ராகிய  கண்ணிய  ராய்த்தவம் 
பண்ணிய  பத்தர்க்கு  முத்தர்க்கு  -  மங்களம். 
7

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com