திருவருட்பா  4. தனித் திருமாலை

திங்கள்அம்  கொழுந்து  வேய்ந்த  செஞ்சடைக்  கொழுந்தே  போற்றி 
மங்கைவல்  லபைக்கு  வாய்த்த  மகிழ்நநின்  மலர்த்தாள்  போற்றி 
ஐங்கர  நால்வாய்  முக்கண்  அருட்சிவ  களிறே  போற்றி 
கங்கையை  மகிழும்  செல்வக்  கணேசநின்  கழல்கள்  போற்றி. 
1
உலகம்  பரவும்  பொருள்என்  கோஎன்  உறவென்கோ 
கலகம்  பெறும்ஐம்  புலன்வென்  றுயரும்  கதிஎன்கோ 
திலகம்  பெறுநெய்  எனநின்  றிலகும்  சிவம்என்கோ 
இலகைங்  கரஅம்  பரநின்  தனைஎன்  என்கேனே. 
2
அடியார்  உள்ளம்  தித்தித்  தூறும்  அமுதென்கோ 
கடியார்  கொன்றைச்  செஞ்சடை  யானைக்  கன்றென்கோ 
பொடியார்  மேனிப்  புண்ணியர்  புகழும்  பொருள்என்கோ 
அடிகேள்  சித்தி  விநாயக  என்என்  றறைகேனே. 
3
கமலமலர்  அயன்நயனன்  முதல்அமரர்  இதயம்உறு  கரிசகல  அருள்செய்பசு  பதியாம் 
நிமலநிறை  மதியின்ஒளிர்  நிரதிசய  பரமசுக  நிலையைஅருள்  புரியும்அதிபதியாம் 
விமலபிர  ணவவடிவ  விகடதட  கடகரட  விபுலகய  முகசுகுண  பதியாம் 
அமலபர  சிவஒளியின்  உதயசய  விசயசய  அபயஎனும்  எமதுகண  பதியே. 
4
அம்பொன்று  செஞ்சடை  அப்பரைப்  போல்தன்  அடியர்தம்துக் 
கம்பொன்றும்  வண்ணம்  கருணைசெய்  தாளும்  கருதுமினோ 
வம்பொன்று  பூங்குழல்  வல்லபை  யோடு  வயங்கியவெண் 
கொம்பொன்று  கொண்டெமை  ஆட்கொண்  டருளிய  குஞ்சரமே. 
5
திருமால்  வணங்கத்  திசைமுகன்  போற்றச்  சிவமுணர்ந்த 
இருமா  தவர்தொழ  மன்றகத்  தாடு  மிறைவடிவாக் 
குருமா  மலர்ப்பிறை  வேணியு  முக்கணுங்  கூறுமைந்து 
வருமா  முகமுங்கொள்  வல்லபை  பாகனை  வாழ்த்துதுமே. 
6

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com