திருவருட்பா  8. முத்தி உபாயம்

ஒற்றி  ஊரனைப் 
பற்றி  நெஞ்சமே 
நிற்றி  நீஅருள் 
பெற்றி  சேரவே.- 
1
சேர  நெஞ்சமே 
தூரம்  அன்றுகாண் 
வாரம்  வைத்தியேல் 
சாரும்  முத்தியே. 
2
முத்தி  வேண்டுமேல் 
பத்தி  வேண்டுமால் 
சத்தி  யம்இது 
புத்தி  நெஞ்சமே. 
3
நெஞ்ச  மேஇது 
வஞ்ச  மேஅல 
பிஞ்ச  கன்பதம் 
தஞ்சம்  என்பதே. 
4
என்ப  தேற்றவன் 
அன்ப  தேற்றுநீ 
வன்பு  மாற்றுதி 
இன்பம்  ஊற்றவே.- 
5
ஊற்றம்  உற்றுவெண் 
நீற்றன்  ஒற்றியூர் 
போற்ற  நீங்குமால் 
ஆற்ற  நோய்களே.- 
6
நோய்கள்  கொண்டிடும் 
பேய்கள்  பற்பலர் 
தூய்தன்  ஒற்றியூர்க் 
கேய்தல்  இல்லையே. 
7
இல்லை  இல்லைகாண் 
ஒல்லை  ஒற்றியூர் 
எல்லை  சேரவே 
அல்லல்  என்பதே.- 
8
அல்லல்  என்பதேன் 
தொல்லை  நெஞ்சமே 
மல்லல்  ஒற்றியூர் 
எல்லை  சென்றுமே.- 
9
சென்று  வாழ்த்துதி 
நன்று  நெஞ்சமே 
என்றும்  நல்வளம் 
ஒன்றும்  ஒற்றியே.- 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com