திருவருட்பா  21. நெஞ்சொடு நேர்தல்

ஒக்க  நெஞ்சமே  ஒற்றி  யூர்ப்படம் 
பக்க  நாதனைப்  பணிந்து  வாழ்த்தினால் 
மிக்க  காமத்தின்  வெம்மை  யால்வரும் 
துக்க  மியாவையும்  தூர  ஓடுமே. 
1
ஓடும்  நெஞ்சமே  ஒன்று  கேட்டிநீ 
நீடும்  ஒற்றியூர்  நிமலன்  மூவர்கள் 
பாடும்  எம்படம்  பக்க  நாதன்தாள் 
நாடு  நாடிடில்  நாடு  நம்மதே. 
2
நம்பு  நெஞ்சமே  நன்மை  எய்துமால் 
அம்பு  யன்புகழ்  அண்ணல்  ஒற்றியூர்ப் 
பம்பு  சீர்ப்படம்  பக்கன்  ஒன்னலார் 
தம்பு  ரஞ்சுடும்  தம்பி  ரானையே. 
3
தம்ப  லம்பெறும்  தைய  லார்கணால் 
வெம்ப  லந்தரும்  வெய்ய  நெஞ்சமே 
அம்ப  லத்தினில்  அமுதை  ஒற்றியூர்ச் 
செம்ப  லத்தைநீ  சிந்தை  செய்வையே. 
4
செய்யும்  வண்ணம்நீ  தேறி  நெஞ்சமே 
உய்யும்  வண்ணமாம்  ஒற்றி  யூர்க்குளே 
மெய்யும்  வண்ணமா  ணிக்க  வெற்பருள் 
பெய்யும்  வண்ணமே  பெறுதல்  வேண்டுமே. 
5
வேண்டும்  நெஞ்சமே  மேவி  ஒற்றியூர் 
ஆண்டு  நின்றருள்  அரசின்  பொற்பதம் 
பூண்டு  கொண்டுளே  போற்றி  நிற்பையேல் 
யாண்டும்  துன்பம்நீ  அடைதல்  இல்லையே. 
6
இல்லை  உண்டென  எய்தி  ஐயுறும் 
கல்லை  யொத்தஎன்  கன்ம  நெஞ்சமே 
ஒல்லை  ஒற்றியூர்  உற்று  வாழ்தியேல் 
நல்லை  நல்லைநீ  நட்பின்  மேலையே. 
7
மேலை  அந்தகன்  வெய்ய  தூதுவர் 
ஓலை  காட்டுமுன்  ஒற்றி  யூரில்வாழ் 
பாலை  சேர்படம்  பக்க  நாதர்தம் 
காலை  நாடிநற்  கதியின்  நிற்பையே. 
8
நிற்ப  தென்றுநீ  நீல  நெஞ்சமே 
அற்ப  மாதர்தம்  அவலம்  நீங்கியே 
சிற்ப  ரன்திருத்  தில்லை  அம்பலப் 
பொற்பன்  ஒற்றியில்  புகுந்து  போற்றியே. 
9
போற்றி  ஒற்றியூர்ப்  புண்ணி  யன்திரு 
நீற்றி  னான்தனை  நினைந்து  நிற்பையேல் 
தோற்ற  ரும்பரஞ்  சோதி  நல்அருள் 
ஊற்றெ  ழும்கடல்  ஒக்க  நெஞ்சமே. 
10

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2025 murugaa.com