திருவருட்பா  106. சிலதா ஸம்வாதம்

தண்மதி  யொண்முகப்  பெண்மணி  யே  -  உன்னைத் 
தான்கொண்ட  நாயக  ராரே  டி 
அண்மையிற்  பொன்னணி  யம்பலத்  தாடல்செய் 
ஐய  ரமுத  ரழக  ரடி. 
1
செங்கயற்  கண்மட  மங்கைநல்  லாய்  -  உன்றன் 
செங்கை  பிடித்தவ  ராரே  டி 
அங்கய  லாரன்று  பொன்னம்ப  லத்தெங்கள் 
ஆனந்தத்  தாண்டவ  ராஜ  னடி. 
2
கன்னற்  சுவைமொழி  மின்னிடை  யாய்  -  உன்னைக் 
கன்னி  யழித்தவ  ராரே  டி 
உன்னற்  கரியபொன்  னம்பலத்  தாடல்செய் 
உத்தம  ரானந்த  சித்த  ரடி. 
3
தீமையி  லாதபெண்  மாமயி  லே  -  உன்னைச் 
சேர்ந்து  கலந்தவ  ராரே  டி 
தாமமு  டிக்கணிந்  தம்பலத்  தேயின்பத் 
தாண்டவஞ்  செய்யுஞ்  சதுர  ரடி. 
4
அன்னந  டைப்பெண்க  ளாரமு  தே  -  உன்னை 
அன்பிற்  புணர்ந்தவ  ராரே  டி 
துன்ன  லுடையின  ரம்பலத்  தேநின்ற 
தூய  திருநட  ராய  ரடி. 
5
காரள  கப்பெண்  சிகாமணி  யே  -  உன்றன் 
கற்பை  யழித்தவ  ராரே  டி 
பேரள  வைக்கடந்  தம்பலத்  தேநின்ற 
பித்தர்  பரானந்த  நித்த  ரடி. 
6

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com