ஐந்து கரத்தனை யானை முகத்தனைஇந்து விளம்பிறை போலு மெயிற்றனைநந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்புந்தி யில்வைத் தடிபோற்றுகின் றேனே.
உரை · meaning
ஐந்து கரங்களையே ஐந்து பூதங்களாக (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) கொண்டவனும், உலகத்தையே தனது திருமுகமாகக் கொண்டவனும், இளம் பிறை நிலாவைப் போன்ற கூர்மையான கொம்புகளை உடையவனும், குருவாக இருக்கின்ற இறைவனின் மகனாக இறைத் தன்மையாகவே இருப்பவனும், உண்மை ஞானத்தின் உச்சமாகவும் இருப்பவனை, எமது அறிவுக்கு உள்ளே வைத்து, அவனது திருவடிகளை யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்.
He whose five hands are the five elements themselves, earth, water, air, fire and ether; whose holy face is the world itself; who bears sharp tusks like the young crescent moon; who, as the son of the Lord who stands as the guru, is himself of the very nature of God; and who is the summit of true wisdom. Him I hold within my understanding, and his holy feet I praise and worship always.
வரி வாரியாக · line by line
- வரி 1
ஐந்து (ஐந்து) கரத்து (கரங்களே) அனை (ஐந்து பூதங்களாக உடையவனும்) யா (உலகம்) அனை (போன்ற) முகத்து (திருமுகமே) அனை (உலகமாக உடையவனும்)
His five hands are the five elements; his holy face is the world itself.
- வரி 2
இந்து (நிலவின்) இளம் (வளரும்) பிறை (பிறை) போலும் (போன்ற) எயிற்று (கொம்புகளை) அனை (கூர்மையாக உடையவனும்)
His tusks are sharp, like the waxing crescent of the moon.
- வரி 3
நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) மகன் (மகனாக) தனை (இறை தன்மையாகவே இருப்பவனை) ஞான (உண்மை ஞானத்தின்) கொழுந்தினை (உச்சமாகவும் இருப்பவனை)
Son of Nandi, the Lord who stands as the guru, he is himself of the nature of God, and the summit of true wisdom.
- வரி 4
புந்தி (எமது அறிவுக்கு) இல் (உள்ளே) வைத்து (வைத்து) அடி (அவனது திருவடிகளை) போற்றுகின்றேனே (யான் எப்போதும் போற்றி வணங்குகின்றேன்).
Holding him within my understanding, I praise and worship his holy feet always.




