தொடர்ந்து படிக்கread this section continuously
அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறும்சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்உணர்த்தும் அவனை உணரலு மாமே.
உரை · meaning
மும்மலங்கள் உயிர்களைவிட்டு விலகுகின்ற முறையையும், அவை உயிர்களைக் கட்டிப்போடும் முறையையும், பந்தபாசத்தால் பிறந்த இவ்வுடலைவிட்டு உயிர் பிரிந்து போகும் முறையையும், இன்னும் பலவற்றை ஆகமங்கள் கூறுகின்றன. தமிழ் மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் ஆகமங்கள் கூறி உணர்த்தும் ஒரே உண்மை, இறைவன் வழங்கிய ஆகமங்களை அவன் அருளாலேயே ஞானம் பெற்று உணர வேண்டும் என்பதே.
The Agamas speak of how the three malams loosen their hold on beings, of how they bind beings, of how the soul departs from this body born of worldly bondage, and of much more besides. In both Tamil and Sanskrit, the one truth that the Agamas declare and make known is this: the Agamas that God gave can only be understood by receiving wisdom through his own grace.
வரி வாரியாக · line by line
- வரி 1
மும்மலங்கள் உயிர்களைவிட்டு விலகுகின்ற முறையையும், அவை உயிர்களைக் கட்டிப்போடும் முறையையும் ஆகமங்கள் கூறுகின்றன.
The Agamas speak of how the three malams loosen their hold on beings, and of how they bind beings.
- வரி 2
பந்தபாசத்தால் பிறந்த இவ்வுடலைவிட்டு உயிர் பிரிந்து போகும் முறையையும் இன்னும் பலவற்றையும் ஆகமங்கள் கூறுகின்றன.
They also speak of how the soul departs from this body born of worldly bondage, and much more besides.
- வரி 3
தமிழ் மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் ஆகமங்கள் இவற்றைக் கூறி உணர்த்துகின்றன.
In both Tamil and Sanskrit, the Agamas declare and make known these very things.
- வரி 4
இறைவன் வழங்கிய ஆகமங்களை அவன் அருளாலேயே ஞானம் பெற்று உணர வேண்டும்.
The Agamas that God gave can only be understood by receiving wisdom through his own grace.
திருமந்திரம் பாடல் #66





