திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 65

பாயிரம்ஆகமச் சிறப்பு

தொடர்ந்து படிக்கread this section continuously

மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்றுஏரியும் நின்றங் கிளைக்கின்ற காலத்துஆரிய மும்தமி ழும்உட னேசொல்லிக்காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.

உரை · meaning

மழைக்காலம், கோடைக்காலம், பனி பெய்யும் குளிர்காலம் என எல்லாக் காலமும் ஏரிகளெல்லாம் நீர் வற்றும். அனைத்தும் யுகங்களின் முடிவான ஊழிக்காலத்தில் அழியும். ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வேதங்களையும் ஆகமங்களையும், புதுயுகத்தில் பிறக்கும் உயிர்களின் தாயான உமாதேவிக்கு உடனே வழங்கி, இறைவன் மாபெரும் கருணை செய்தான்.

Through the rainy season, the summer, and the season of falling frost, in every season, the lakes run dry. And in the end, at the great dissolution that closes the ages, everything perishes. In both Sanskrit, the Aryan tongue, and in Tamil, God gave the Vedas and the Agamas at once to Uma Devi, mother of the beings to be born in the new age, so that they could reach him, showing his great compassion.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    மழைக்காலம், கோடைக்காலம், பனி பெய்யும் குளிர்காலம் என எல்லாக் காலமும் ஏரிகளெல்லாம் நீர் வற்றும்.

    Through the rainy season, the summer, and the season of falling frost, in every season, the lakes run dry.

  • வரி 2

    அனைத்தும் யுகங்களின் முடிவான ஊழிக்காலத்தில் அழியும்.

    And in the end, at the great dissolution that closes the ages, everything perishes.

  • வரி 3

    ஆரிய மொழியாகிய சமஸ்கிருதத்திலும் தமிழிலும் வேதங்களையும் ஆகமங்களையும்,

    In both Sanskrit, the Aryan tongue, and in Tamil, the Vedas and the Agamas,

  • வரி 4

    புதுயுகத்தில் பிறக்கும் உயிர்களின் தாயான உமாதேவிக்கு உடனே வழங்கி, இறைவன் மாபெரும் கருணை செய்தான்.

    God gave at once to Uma Devi, mother of the beings to be born in the new age, so that they could reach him, showing his great compassion.

திருமந்திரம் பாடல் #65

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com