தொடர்ந்து படிக்கread this section continuously
அண்ணல் அருளால் அருளும்திவ் யாகமம்விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரிதுஎண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.
உரை · meaning
உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய திவ்யமான ஆகமங்கள், விண்ணகத்தில் இருக்கும் அமரர்க்கும் பொருள் விளங்க அரிதானவை. மொத்தமுள்ள ஆகமங்களை எண்ணினால் அவை எழுபது கோடி நூறாயிரம். இத்தனை கோடி ஆகமங்களை எண்ணிக்கொண்டிருந்தாலும், நீர்மேல் எழுதிய எழுத்தைப் படிக்க முடியாதது போலவே, அவற்றின் பொருளை உணரமுடியாமல் போய்விடும்.
The divine Agamas that God graciously gave for beings to reach him are difficult to grasp even for the immortals in the heavens. If one counts all the Agamas together, they number seventy crore and one hundred thousand. And even after counting that many crores of Agamas, understanding their meaning becomes as impossible as reading letters written upon water.
வரி வாரியாக · line by line
- வரி 1
உயிர்கள் தன்னை அடைய இறைவன் அருளிய திவ்யமான ஆகமங்கள் இவை.
These are the divine Agamas that God graciously gave for beings to reach him.
- வரி 2
விண்ணகத்தில் இருக்கும் அமரர்க்கும் இவற்றின் பொருள் விளங்குவது அரிது.
Even for the immortals in the heavens, grasping their meaning is difficult.
- வரி 3
மொத்தமுள்ள ஆகமங்களை எண்ணினால் அவை எழுபது கோடி நூறாயிரம்.
If one counts all the Agamas together, they number seventy crore and one hundred thousand.
- வரி 4
இத்தனை கோடி ஆகமங்களை எண்ணிக்கொண்டிருந்தாலும், நீர்மேல் எழுதிய எழுத்தைப் படிக்க முடியாதது போலவே, அவற்றின் பொருளை உணரமுடியாமல் போய்விடும்.
And even after counting that many crores of Agamas, understanding their meaning becomes as impossible as reading letters written upon water.
திருமந்திரம் பாடல் #60





