திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 47

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்பனையுள் இருந்த பருந்தது போலநினையாத வர்க்கில்லை நின்இன்பம் தானே.

உரை · meaning

கர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருப்பவர்கள், மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள். இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பவர்கள் அவனுடைய பேரன்பிலேயே எப்போதும் நிற்பார்கள். பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து, அம்மரத்தின் பலன்களை அனுபவிக்காமல் வெளியில் உணவு தேடி அலைவதைப் போல, இறைவன் அருகிலேயே இருந்தும் அவனை நினைக்காதவர்களுக்குப் பேரின்பம் ஒருபோதும் கிடைப்பதில்லை.

Those who, caught up in household life because of the fruit of their karma, still keep God in their thoughts at all times, are equal to those who perform the greatest penance. Those who think of God constantly always stand within his great love. Like a kite that nests and lives in a palmyra tree yet, without ever tasting that tree's own fruit, flies off elsewhere searching for food, those who do not think of God, even while he is right beside them, never obtain the supreme bliss.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    கர்மவினைப் பயனால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே எப்போதும் இறைவன் சிந்தனையில் இருப்பவர்கள், மாபெரும் தவம் செய்பவர்களுக்கு ஈடானவர்கள்.

    Those who, caught up in household life because of the fruit of their karma, still keep God in their thoughts at all times, are equal to those who perform the greatest penance.

  • வரி 2

    இறைவனை எப்போதும் நினைத்துக்கொண்டே இருப்பவர்கள் அவனுடைய பேரன்பிலேயே எப்போதும் நிற்பார்கள்.

    Those who think of God constantly always stand within his great love.

  • வரி 3

    பனைமரத்தில் கூடு கட்டி வாழும் பருந்து, அம்மரத்தின் பலன்களை அனுபவிக்காமல் வெளியில் உணவு தேடி அலைவதைப் போல,

    Like a kite that nests and lives in a palmyra tree yet, without ever tasting that tree's own fruit, flies off elsewhere searching for food,

  • வரி 4

    இறைவன் அருகிலேயே இருந்தும் அவனை நினைக்காதவர்களுக்குப் பேரின்பம் ஒருபோதும் கிடைப்பதில்லை.

    those who do not think of God, even while he is right beside them, never obtain the supreme bliss.

திருமந்திரம் பாடல் #47

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com