தொடர்ந்து படிக்கread this section continuously
விதிவழி அல்லதிவ் வேலை உலகம்விதிவழி இன்பம் விருத்தமும் இல்லைதுதிவழி நித்தலும் சோதிப் பிரானும்பதிவழி காட்டும் பகலவன் ஆமே.
உரை · meaning
இவ்வுலகம் கர்ம விதிப்படியே இயங்குகிறதே அன்றி வேறு வழியில்லை. உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர் கர்ம விதிப்படியே அமையுமேயன்றி மாறுவதில்லை. இருப்பினும், முக்தியடைய வேண்டுமென்ற எண்ணத்தில் இறைவனை நாள்தோறும் வணங்கித் துதிக்கும் உயிர்களின் கர்ம விதிகளை அகற்ற, சூரியனைப் போல் ஒளியாய் வந்து, முக்தி பெறும் வழியைக் காட்டி அருள்வான் இறைவன்.
This world runs only by the law of karma, and by no other way. The pleasure and pain that beings receive are fixed by each one's own karma, and do not change of themselves. And yet, for beings who worship and praise God every day with the wish to attain liberation, God comes like the sun in light to remove their karma, and shows them, in grace, the way to reach liberation.
வரி வாரியாக · line by line
- வரி 1
இவ்வுலகம் கர்ம விதிப்படியே இயங்குகிறதே அன்றி வேறு வழியில்லை.
This world runs only by the law of karma, and by no other way.
- வரி 2
உயிர்கள் பெறும் இன்பமும் துன்பமும் அவரவர் கர்ம விதிப்படியே அமையுமேயன்றி மாறுவதில்லை.
The pleasure and pain that beings receive are fixed by each one's own karma, and do not change of themselves.
- வரி 3
இருப்பினும், முக்தியடைய வேண்டுமென்ற எண்ணத்தில் இறைவனை நாள்தோறும் வணங்கித் துதிக்கும் உயிர்களின்,
And yet, for beings who worship and praise God every day with the wish to attain liberation,
- வரி 4
கர்ம விதிகளை அகற்ற, சூரியனைப் போல் ஒளியாய் வந்து, முக்தி பெறும் வழியைக் காட்டி அருள்வான் இறைவன்.
God comes like the sun in light to remove their karma, and shows them, in grace, the way to reach liberation.
திருமந்திரம் பாடல் #45





