தொடர்ந்து படிக்கread this section continuously
அரனடி சொல்லி அரற்றி அழுதுபரனடி நாடியே பாவிப்ப நாளும்உரனடி செய்தங் கொதுங்கவல் லார்க்குநிரனடி செய்து நிறைந்துநின் றானே.
உரை · meaning
இறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தைக் கூறி, அன்பால் கசிந்துருகி அழுது, ஆராய்ந்து தெளிந்து, இறைவன் திருவடியை நாள்தோறும் உறுதியான உள்ளத்தோடு தியானித்து, அந்த உணர்விலேயே இலயித்திருப்பவர்களுக்கு, திருவடிப் பேற்றை அருளி, இறைவன் அவர்களுடன் நிறைந்திருப்பான்.
Thinking of God's holy feet, speaking his name, melting and weeping with love, examining and coming to clarity, meditating on God's feet every day with a firm mind, and remaining absorbed in that very feeling, to such people, God grants the attainment of his feet, and remains present with them, filling them completely.
வரி வாரியாக · line by line
- வரி 1
இறைவன் திருவடியை நினைத்து அவன் நாமத்தைக் கூறி, அன்பால் கசிந்துருகி அழுது,
Thinking of God's holy feet, speaking his name, melting and weeping with love,
- வரி 2
ஆராய்ந்து தெளிந்து, இறைவன் திருவடியை நாள்தோறும் தியானித்து,
examining and coming to clarity, meditating on God's feet every day,
- வரி 3
உறுதியான உள்ளத்தோடு அந்த உணர்விலேயே இலயித்திருப்பவர்களுக்கு,
and remaining absorbed in that very feeling with a firm mind,
- வரி 4
திருவடிப் பேற்றை அருளி, இறைவன் அவர்களுடன் நிறைந்திருப்பான்.
to such people, God grants the attainment of his feet, and remains present with them, filling them completely.
திருமந்திரம் பாடல் #43





