தொடர்ந்து படிக்கread this section continuously
வாழ்த்தவல் லார்மனத் துள்ளுறு சோதியைத்தீர்த்தனை அங்கே திளைக்கின்ற தேவனைஏத்தியும் எம்பெரு மான்என் றிறைஞ்சியும்ஆத்தம்செய் தீசன் அருள்பெற லாமே.
உரை · meaning
இறைவனின் எல்லையற்ற குணங்களை உணர்ந்து புகழ்ந்து போற்றக்கூடியவர்களின் மனத்துள் ஜோதியாகப் பரவி இருப்பவனும், அடியவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு அங்கே பெருமகிழ்வோடு வீற்றிருக்கும் தூயவனுமான சதாசிவமூர்த்தியை, போற்றியும் புகழ்ந்தும், 'எம்பெருமான்' என்று உரக்க அவன் நாமத்தைக் கூறியும், உண்மையான அன்போடு இருந்தால், அவனுடைய அருளைப் பெறலாம்.
Sadasivamurthy spreads as light within the minds of those who understand his boundless qualities and are able to praise him, and he takes the devotee's own heart as his temple, dwelling there with great joy, the pure one. Praise him, glorify him, call out his name aloud as "our Lord", and hold him with true, sincere love, and you may obtain his grace.
வரி வாரியாக · line by line
- வரி 1
இறைவனின் எல்லையற்ற குணங்களை உணர்ந்து புகழ்ந்து போற்றக்கூடியவர்களின் மனத்துள் ஜோதியாகப் பரவி இருப்பவன் அவன்.
He spreads as light within the minds of those who understand his boundless qualities and are able to praise him.
- வரி 2
அடியவர் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டு, அங்கே பெருமகிழ்வோடு வீற்றிருக்கும் தூயவனும் தேவனும் அவனே.
He takes the devotee's own heart as his temple, dwelling there with great joy, the pure one, the deva.
- வரி 3
அவனைப் போற்றியும் புகழ்ந்தும், 'எம்பெருமான்' என்று உரக்க அவன் நாமத்தைக் கூறியும்,
Praise him, glorify him, call out his name aloud as "our Lord",
- வரி 4
உண்மையான அன்போடு இருந்தால், ஈசனுடைய அருளைப் பெறலாம்.
and hold him with true, sincere love, and you may obtain Isan's grace.
திருமந்திரம் பாடல் #39





