திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 37

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

நானும்நின் றேத்துவன் நாள்தொறும் நந்தியைத்தானும்நின் றான்தழல் தானொக்கு மேனியன்வானில்நின் றார்மதி போல்உடல் உள்ளுவந்தூனில்நின் றாங்கே உயிர்க்கின்ற வாறே.

உரை · meaning

இறைவன் திருவருளால் நாள்தோறும் குருவாய் இருக்கும் நந்தியை வழிபட்டு நிற்கிறேன். அவனும், சிவப்பாய் எரியும் நெருப்புத் தழல் போன்ற வெளிச்சத்துடன் நம்முடன் நிற்கிறான். வானத்தில் இருளை நீக்கிப் பிரகாசமாய் ஒளிரும் நிலவைப் போல, அவன் குருவை வணங்குபவரின் உடலுக்குள் மகிழ்ந்து வருகிறான். அங்கே உயிருக்கு உயிராக நின்று, அஞ்ஞான இருளை அகற்றும் பேரொளியாக அவன் இருக்கிறான்.

By God's own grace, I stand and worship Nandi, who is my guru every single day. He too stands with us, glowing with a light like a red, burning flame. Like the moon that dispels darkness and shines bright in the sky, he comes gladly into the body of one who worships the guru. There, he stands as life to that life, the great light that drives away the darkness of ignorance.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    இறைவன் திருவருளால் நாள்தோறும் குருவாய் இருக்கும் நந்தியை வழிபட்டு நிற்கிறேன்.

    By God's own grace, I stand and worship Nandi, who is my guru every single day.

  • வரி 2

    அவனும், சிவப்பாய் எரியும் நெருப்புத் தழல் போன்ற வெளிச்சத்துடன் நம்முடன் நிற்கிறான்.

    He too stands with us, glowing with a light like a red, burning flame.

  • வரி 3

    வானத்தில் இருளை நீக்கிப் பிரகாசமாய் ஒளிரும் நிலவைப் போல, அவன் குருவை வணங்குபவரின் உடலுக்குள் மகிழ்ந்து வருகிறான்.

    Like the moon that dispels darkness and shines bright in the sky, he comes gladly into the body of one who worships the guru.

  • வரி 4

    அங்கே உயிருக்கு உயிராக நின்று, அஞ்ஞான இருளை அகற்றும் பேரொளியாக அவன் இருக்கிறான்.

    There, he stands as life to that life, the great light that drives away the darkness of ignorance.

திருமந்திரம் பாடல் #37

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com