திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 36

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

அப்பனை நந்தியை ஆரா அமுதினைஒப்பிலி வள்ளலை ஊழி முதல்வனைஎப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்அப்பரி சீசன் அருள்பெறலாமே.

உரை · meaning

உயிரின் தந்தையாகவும் குருவாகவும் இருக்கும் இறைவன், தெவிட்டாத அமுதம் போன்றவன். வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும், தனக்கு ஒப்பில்லாத வள்ளலும், ஊழிகளைச் செய்யும் முதல்வனும் அவனே. வரைமுறையின்றி எத்தன்மையிலும் எவ்வழியில் வழிபட்டாலும், அவ்வழியிலேயே ஈசனின் அருளைப் பெறலாம்.

He is father and guru to every soul, and he is like an ambrosia that never cloys. He is the incomparable benefactor granting whatever a devotee asks for, and he is the primal one who carries out the ages. Whatever way, without any fixed rule, one worships him, in that very way, one may obtain Isan's grace.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    உயிரின் தந்தையாகவும் குருவாகவும் இருக்கும் இறைவன், தெவிட்டாத அமுதம் போன்றவன்.

    He is father and guru to every soul, and he is like an ambrosia that never cloys.

  • வரி 2

    வேண்டுவோர்க்கு வேண்டியதை அருளும், தனக்கு ஒப்பில்லாத வள்ளலும், ஊழிகளைச் செய்யும் முதல்வனும் அவனே.

    He is the incomparable benefactor granting whatever a devotee asks for, and he is the primal one who carries out the ages.

  • வரி 3

    வரைமுறையின்றி எத்தன்மையிலும் எவ்வழியில் வழிபட்டாலும்,

    Whatever way, without any fixed rule, one worships him,

  • வரி 4

    அவ்வழியிலேயே ஈசனின் அருளைப் பெறலாம்.

    in that very way, one may obtain Isan's grace.

திருமந்திரம் பாடல் #36

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com