திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 34

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

சாந்து கமழும் கவரியின் கந்தம்போல்வேந்தன் அமரர்க் கருளிய மெய்ந்நெறிஆர்ந்த சுடரன்ன ஆயிர நாமமும்போந்தும் இருந்தும் புகழுகின் றேனே.

உரை · meaning

வாசனையில்லாத வெறும் கூந்தலில், வாசனைப் பொருள்களைச் சேர்த்து அரைத்த சாந்தைப் பூசியவுடன் இனிய மணம் வருவதைப் போல, உண்மையில்லாத உலகப் பற்றுக்களை விட்டு உண்மையான இறைவனை அடைந்து சிவமணம் கமழும் முக்தி பெற, இறைவன் அமரர்களுக்கு அருளிய மெய்ஞான வழி, ஆயிரம் சூரியனைப் போல் பிரகாசிக்கும் பேரறிவு ஒளியைத் தரும் 'ஓம் நமசிவாய' என்னும் முழுமையான திருநாமமே. அதன் அருமையை உணர்ந்ததால், செயலற்று ஓய்ந்திருக்கும்போதும் செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போதும், அத்திருநாமத்தை இடைவிடாது போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றேன்.

Just as scentless hair becomes sweetly fragrant the moment sandal paste, ground with fragrant ingredients, is applied to it, the true path of wisdom that God granted the immortals, to leave behind empty worldly attachments and reach the real God, gaining liberation fragrant with Shiva himself, is the complete sacred name Om Namasivaya, which grants the light of supreme wisdom shining like a thousand suns. Having realised its worth, I go on praising that sacred name without break, whether I am at rest, doing nothing, or engaged in action.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    வாசனையில்லாத வெறும் கூந்தலில், வாசனைப் பொருள்களைச் சேர்த்து அரைத்த சாந்தைப் பூசியவுடன் இனிய மணம் வருவதைப் போல,

    Just as scentless hair becomes sweetly fragrant the moment sandal paste, ground with fragrant ingredients, is applied to it,

  • வரி 2

    உண்மையில்லாத உலகப் பற்றுக்களை விட்டு உண்மையான இறைவனை அடைந்து சிவமணம் கமழும் முக்தி பெற, இறைவன் அமரர்களுக்கு அருளிய மெய்ஞான வழி,

    the true path of wisdom that God granted the immortals, to leave behind empty worldly attachments and reach the real God, gaining liberation fragrant with Shiva himself,

  • வரி 3

    ஆயிரம் சூரியனைப் போல் பிரகாசிக்கும் பேரறிவு ஒளியைத் தரும் 'ஓம் நமசிவாய' என்னும் முழுமையான திருநாமமே.

    is the complete sacred name Om Namasivaya, which grants the light of supreme wisdom shining like a thousand suns.

  • வரி 4

    அதன் அருமையை உணர்ந்ததால், செயலற்று ஓய்ந்திருக்கும்போதும் செயல்களைச் செய்துகொண்டிருக்கும்போதும், அத்திருநாமத்தை இடைவிடாது போற்றிப் புகழ்ந்துகொண்டே இருக்கின்றேன்.

    Having realised its worth, I go on praising that sacred name without break, whether I am at rest, doing nothing, or engaged in action.

திருமந்திரம் பாடல் #34

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com