திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 33

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

பதிபல ஆயது பண்டிவ் உலகம்விதிபல செய்தொன்று மெய்ம்மை உணரார்துதிபல தோத்திரம் சொல்லவல் லாரும்மதிஇலர் நெஞ்சினுள் வாடுகின் றாரே.

உரை · meaning

பண்டைய காலத்திலிருந்தே இவ்வுலகில் உள்ளோர் பலவிதமான தெய்வங்களை வணங்கினர்; ஒவ்வொரு தெய்வத்திற்கும் வரைமுறைகளையும் விதிமுறைகளையும் வகுத்தனர். இவ்வாறு பல விதிமுறைகளை வகுத்து, பலவிதமான துதிகளையும் தோத்திரங்களையும் இசையோடு பாடவல்லவர்கள் கூட, உண்மை என்ன என்று உணராமல், உண்மையான ஞானத்தை அடையாமல், நெஞ்சத்தில் அமைதியின்றித் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

Since ancient times, people in this world have worshipped many different deities, laying down rules and rites for each one. But even those skilled enough to lay down many such rules, and to sing many kinds of hymns and praises set to music, do not grasp what the truth really is. Without reaching true wisdom, they remain troubled, their hearts without peace.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    பண்டைய காலத்திலிருந்தே இவ்வுலகில் உள்ளோர் பலவிதமான தெய்வங்களை வணங்கி வந்தனர்.

    Since ancient times, people in this world have worshipped many different deities.

  • வரி 2

    ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல வரைமுறைகளையும் விதிமுறைகளையும் வகுத்தும், உண்மை என்ன என்று உணராதவர்களாக இருக்கின்றனர்.

    Even after laying down many rules and rites for each deity, they do not grasp what the truth really is.

  • வரி 3

    பலவிதமான துதிகளையும் தோத்திரங்களையும் இசையோடு பாடவல்லவர்கள் கூட,

    Even those skilled enough to sing many kinds of hymns and praises set to music,

  • வரி 4

    உண்மையான ஞானத்தை அடையாமல், நெஞ்சத்தில் அமைதியின்றித் துன்பப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.

    without reaching true wisdom, remain troubled, their hearts without peace.

திருமந்திரம் பாடல் #33

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com