தொடர்ந்து படிக்கread this section continuously
வானின் றழைக்கும் மழைபோல் இறைவனும்தானின் றழைக்குங்கொல் என்று தயங்குவார்ஆனின் றழைக்கும் அதுபோல்என் நந்தியைநானின் றழைப்பது ஞானம் கருதியே.
உரை · meaning
வானத்திலிருந்து பெய்யும் மழை, வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் அனைவர் மேலும் பொதுவாகப் பெய்கிறது. அதுபோலவே, இறைவனின் அருளும் வேண்டியவர் வேண்டாதவர் என்றின்றி அனைவருக்கும் கிடைக்கும் என்று எண்ணி, இறைவனை நாடிச் செல்ல சிலர் தயங்குவார்கள். ஆனால், கன்று தன் பசியைத் தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிப்பதைப் போலவே, குருவாகிய சதாசிவமூர்த்தியை நான் இன்று வேண்டி அழைப்பது, எனது ஞானப் பசியை அவர் தீர்க்க வேண்டும் என்ற வேண்டுதலால்தான்.
The rain that falls from the sky falls equally on everyone, without asking who wants it and who does not. In the same way, some hesitate to seek God out, thinking that his grace will reach everyone regardless, wanted or not. But just as a calf cries out to its mother cow to make its hunger known, I call out today to Sadasivamurthy, my guru, only because I want him to satisfy my hunger for wisdom.
வரி வாரியாக · line by line
- வரி 1
வானத்திலிருந்து பெய்யும் மழை வேண்டியவர் வேண்டாதவர் என்று பாராமல் அனைவர் மேலும் பொதுவாகப் பெய்வதைப் போல, இறைவனும் அருள்கிறான்.
Just as the rain that falls from the sky falls equally on everyone without asking who wants it, God too grants his grace.
- வரி 2
அது இன்று தமக்குக் கிடைக்குமா என்று சிலர் தயங்கி, இறைவனை நாடிச் செல்லாமல் இருப்பார்கள்.
Some hesitate, wondering whether it will reach them today, and so do not go seeking God.
- வரி 3
கன்று தன் பசியைத் தாய்ப்பசுவை நோக்கிக் கதறித் தெரிவிப்பதைப் போல, என் நந்தியை,
Just as a calf cries out to its mother cow to make its hunger known, I call out to my Nandi,
- வரி 4
நான் இன்று வேண்டி அழைப்பது, எனது ஞானப் பசியை அவர் தீர்க்க வேண்டும் என்பதற்காகவே.
today, only because I want him to satisfy my hunger for wisdom.
திருமந்திரம் பாடல் #30





