திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 29

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

காணநில் லாய்அடி யேற்குற வாருளர்நாணநில் லேன்உன்னை நான்தழு விக்கொளக்கோணநில் லாத குணத்தடி யார்மனத்தாணியன் ஆகி அமர்ந்துநின் றானே.

உரை · meaning

உம்மைக் காண வேண்டுமென்ற ஆசையால் துடிக்கும் இந்த அடியேன் முன்னே நீர் எழுந்தருள வேண்டும். நீர் எழுந்தருளிவிட்டால், உம்மை உடனடியாக ஆரத் தழுவிக்கொள்வதில் யான் சிறிதும் வெட்கப்படமாட்டேன். இறைவனை இடையறாது நினைத்துக்கொண்டிருக்கும், மாறாத குணமுடைய அடியவர்களின் மனத்தில் ஆணி அடித்தாற்போல் உறுதியாக அமர்ந்திருக்கிறான் சதாசிவமூர்த்தி.

You must appear before this servant of yours, who trembles with longing to see you. If you appear, I will not feel the least shame in embracing you close at once. In the minds of devotees whose nature never wavers from ceaselessly thinking of him, Sadasivamurthy sits fixed there, as firm as a driven nail.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    உம்மைக் காண வேண்டுமென்ற ஆசையால் துடிக்கும் இந்த அடியேன் முன்னே நீர் எழுந்தருள வேண்டும்.

    You must appear before this servant of yours, who trembles with longing to see you.

  • வரி 2

    நீர் எழுந்தருளிவிட்டால், உம்மை உடனடியாக ஆரத் தழுவிக்கொள்வதில் யான் சிறிதும் வெட்கப்படமாட்டேன்.

    If you appear, I will not feel the least shame in embracing you close at once.

  • வரி 3

    இறைவனை இடையறாது நினைத்துக்கொண்டிருக்கும், மாறாத குணமுடைய அடியவர்களின் மனத்தில்,

    In the minds of devotees whose nature never wavers from ceaselessly thinking of him,

  • வரி 4

    ஆணி அடித்தாற்போல் உறுதியாக அமர்ந்திருக்கிறான் சதாசிவமூர்த்தி.

    Sadasivamurthy sits fixed there, as firm as a driven nail.

திருமந்திரம் பாடல் #29

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com