தொடர்ந்து படிக்கread this section continuously
தொடர்ந்துநின் றானைத் தொழுமின் தொழுதால்படர்ந்துநின் றான்பரி பாரக முற்றும்கடந்துநின் றான்கம லம்மலர் மேலேபுணர்ந்திருந் தானடிப் புண்ணிய மாமே.
உரை · meaning
அனைத்து உயிர்களையும் விட்டு நீங்காமல் அவர்களுடனேயே எப்போதும் நிற்கும் இறைவனை நாள்தோறும் வணங்குங்கள். அவ்வாறு வணங்கி வந்தால், உலகமும் அண்டசராசரங்கள் முழுவதும் படர்ந்து விரிந்திருப்பவனும், அவற்றையும் தாண்டி நிற்பவனும், உயிர்களின் தலையுச்சியிலிருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தின் ஆயிரம் தாமரை இதழ்களில் வசிப்பவனுமான சதாசிவமூர்த்தியுடன் கலந்து, அவன் திருவடியை எப்போதும் காணும் புண்ணியத்தை அடையலாம்.
Worship every day the God who never leaves any being, standing with them always. If you worship him in this way, you may come to merge with Sadasivamurthy, who spreads through and pervades the whole world and universe, who stands transcending even that, and who dwells in the thousand lotus petals of the Sahasrara, the seventh chakra at the crown of a being's head, and so attain the blessedness of always beholding his holy feet.
வரி வாரியாக · line by line
- வரி 1
அனைத்து உயிர்களையும் விட்டு நீங்காமல் அவர்களுடனேயே எப்போதும் நிற்கும் இறைவனை நாள்தோறும் வணங்குங்கள்.
Worship every day the God who never leaves any being, standing with them always.
- வரி 2
அவ்வாறு வணங்கி வந்தால், உலகமும் அண்டசராசரங்கள் முழுவதும் படர்ந்து விரிந்திருப்பவனான சதாசிவமூர்த்தியை அடையலாம்.
If you worship him in this way, you may reach Sadasivamurthy, who spreads through and pervades the whole world and universe.
- வரி 3
அவற்றையும் தாண்டி நிற்பவனும், உயிர்களின் தலையுச்சியிலிருக்கும் ஏழாவது சக்கரமான சகஸ்ரரதளத்தின் ஆயிரம் தாமரை இதழ்களில் வசிப்பவனும் அவனே.
He also stands transcending all of that, and dwells in the thousand lotus petals of the Sahasrara, the seventh chakra at the crown of a being's head.
- வரி 4
அவனுடன் கலந்து, அவன் திருவடியை எப்போதும் காணும் புண்ணியத்தை அடையலாம்.
You may merge with him and attain the blessedness of always beholding his holy feet.
திருமந்திரம் பாடல் #26





