தொடர்ந்து படிக்கread this section continuously
வல்லவன் வன்னிக் கிறையிடை வாரணம்நில்லென நிற்பித்த நீதியுள் ஈசனைஇல்லென வேண்டா இறையவர் தம்முதல்அல்லும் பகலும் அருளுகின் றானே.
உரை · meaning
சர்வ வல்லமை படைத்தவனும், அக்கினிக்குத் தலைவனும், காட்டு யானைத் தோலை ஆடையாகப் போர்த்தியவனும், மும்மலங்கள் தன் அடியவர்களைப் பாதிக்காதபடி 'நில்' என்று கட்டளையிட்டவனும், அனைத்து உயிர்களுக்கும் சரிசமமாக நீதி வழங்குபவனுமான எம்பெருமான் இறைவனை, அறியாமையால் 'இல்லை' என்று சொல்லாதீர்கள். வானத்துத் தேவர்கள் முதல் அனைத்து உயிர்களுக்கும் இரவும் பகலும் இடைவிடாது அருள் வழங்கி நிற்பவன் இறைவன்.
இறைவன் சர்வ வல்லமை படைத்தவன். குண்டலினி அக்கினி, உணவைச் செரிக்கும் ஜடராக்கினி, கடல் நீரைக் கரை தாண்டாமல் வைத்திருக்கும் படபாக்கினி, உலகின் தட்பவெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பூமியின் மைய அக்கினி, எரிமலையாக வெடிக்கும் அக்கினி ஆகிய அனைத்து அக்கினிகளுக்கும் இறைவன் தலைவன். குண்டலினி அக்கினி இருக்கும் மூலாதாரத்தில்தான் உயிர்களின் நல்கர்மாக்கள் உள்ளன; அவை மேலெழும்பாதபடி ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் யானையின் கனம்போலத் தடுத்து, எளிதில் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. பிறவி நீங்கி இறைவனை அடைய வேண்டுமென உண்மையான பக்தியோடு வணங்கும் அடியவர்களின் முக்திக்கு உதவும் நல்கர்மாக்களை மேலெழுப்ப, யானை போன்ற இம்மும்மலங்களைத் தன் இடையில் ஆடையாக அணிந்து, 'அடியவர்களின் முத்தி வழியைத் தடுக்காதீர், நில்லுங்கள்' என்று கட்டளையிட்டு, அடியவர்களைப் பிறவிப் பிணியிலிருந்து காக்கின்றான் இறைவன். இத்தகைய நீதியுள்ளவனும் பெருங்கருணையாளனுமான இறைவனை அறியாமையால் இல்லை என்று சொல்ல வேண்டாம். அவன் இரவும் பகலும் தம்மை நாடிவரும் உயிர்களுக்கு இடைவிடாது அருள் புரிந்துகொண்டே இருக்கின்றான்.
Do not say, out of ignorance, that God does not exist, this same Lord who holds all power, who is lord over fire, who wears the hide of the wild elephant as his garment, who commanded the three defilements to stand still so they would not harm his devotees, and who gives justice equally to every living being. From the gods of heaven to every living being, he grants his grace without break, night and day.
God holds all power. He is lord over every kind of fire: the kundalini fire, the jataragni that digests food, the vadabagni that keeps the sea from crossing its shore, the earth's own central fire that governs the world's heat and cold, and the fire that bursts out as a volcano. It is in the muladhara, where the kundalini fire resides, that a being's good karmas lie. The three defilements, egoism, karma and maya, hold those good karmas down with the weight of an elephant, so they cannot easily be resolved. For devotees who worship him with true devotion, wishing to leave this birth and reach him, God raises up the good karmas that help toward liberation: he wears these elephant-like three defilements as a garment at his own waist, commands them, "stand still, do not block your devotees' path to liberation," and so protects his devotees from the disease of rebirth. Do not say, out of ignorance, that such a just and deeply compassionate God does not exist. He continues, without break, night and day, to grant his grace to every being who comes seeking him.
வரி வாரியாக · line by line
- வரி 1
சர்வ வல்லமை படைத்தவனும், அக்கினிக்குத் தலைவனும், காட்டு யானைத் தோலை ஆடையாகப் போர்த்தியவனும் அவனே.
He holds all power, he is lord over fire, and he wears the hide of the wild elephant as his garment.
- வரி 2
ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்கள் யானையின் கனம்போல் நல்கர்மாக்களை மேலெழும்பவிடாமல் தடுத்திருக்க, அவற்றை 'நில்' என்று கட்டளையிட்டு அடக்கிய நீதியுள்ள ஈசன் அவன்.
The three defilements, egoism, karma and maya, hold down a being's good karmas with the weight of an elephant; he is the just Isan who commanded them to stand still.
- வரி 3
வானத்துத் தேவர்கள் முதல் அனைத்து உயிர்களும், அறியாமையால் இறைவன் இல்லை என்று சொல்ல வேண்டாம்.
From the gods of heaven to every living being, do not say, out of ignorance, that God does not exist.
- வரி 4
இரவும் பகலும் இடைவிடாது அருள் வழங்கி நின்று, அடியவர்களைப் பிறவிப் பிணியிலிருந்து காக்கின்றான் இறைவன்.
Night and day, without break, he grants his grace and protects his devotees from the disease of rebirth.
திருமந்திரம் பாடல் #23





