திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 16

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

கோது குலாவிய கொன்றைக் குழற்சடைமாது குலாவிய வாள்நுதல் பாகனையாது குலாவி அமரருந் தேவரும்கோது குலாவிக் குணம்பயில் வாரே

உரை · meaning

நரம்புடன் கூடிய தூய கொன்றைப் பூவைச் சூடி, சுருள் சுருளான சடையை உடையவன் அவன். அழகும் ஒளியும் நிறைந்த நெற்றியுடைய உமாதேவியைத் தன் இடப்பாகத்தில் கொண்டவனும், குற்றமற்ற தூயவனும் அவனே. இன்னும் மும்மலப் பற்றுகள் நீங்காத அமரர்களும் தேவர்களும் எப்படி இவனுடன் கூடிக் குலாவ முடியும்? ஆதலால், இறைவனின் உண்மையான இயல்பை அவர்கள் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

He wears the pure konrai flower with its stalk, and has curling matted locks. He holds Umadevi, whose forehead is full of beauty and light, on his left side, and he is faultless and pure. How could the amarars and devas, who have still not shed the three defilements, ever draw close to and associate with him? And so they remain without truly knowing his true nature.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    நரம்புடன் கூடிய தூய கொன்றைப் பூவைச் சூடி, சுருள் சுருளான சடையை உடையவன் அவன்.

    He wears the pure konrai flower with its stalk, and has curling matted locks.

  • வரி 2

    அழகும் ஒளியும் நிறைந்த நெற்றியுடைய உமாதேவியைத் தன் இடப்பாகத்தில் கொண்டவனும், குற்றமற்ற தூயவனும் அவனே.

    He holds Umadevi, whose forehead is full of beauty and light, on his left side, and he is faultless and pure.

  • வரி 3

    இன்னும் மும்மலப் பற்றுகள் நீங்காத அமரர்களும் தேவர்களும் எப்படி இவனுடன் கூடிக் குலாவ முடியும்?

    How could the amarars and devas, who have still not shed the three defilements, ever draw close to and associate with him?

  • வரி 4

    ஆதலால், இறைவனின் உண்மையான இயல்பை அவர்கள் அறியாமலேயே இருக்கின்றார்கள்.

    And so they remain without truly knowing his true nature.

திருமந்திரம் பாடல் #16

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com