திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 13

பாயிரம்கடவுள் வாழ்த்து

தொடர்ந்து படிக்கread this section continuously

மண்ணளந் தான்மல ரோன்முதல் தேவர்கள்எண்ணளந் தின்னம் நினைக்கிலார் ஈசனைவிண்ணளந் தான்தன்னை மேல்அளந் தாரில்லைகண்ணளந் தெங்குங் கடந்துநின் றானே.

உரை · meaning

மூவுலகையும் மூன்று அடிகளால் அளந்த திருமாலும், தாமரை மலரில் அமர்ந்த பிரம்மனும் முதலான அனைத்துத் தேவர்களும், தங்கள் எண்ணத்தால் கூட அளக்க முடியாத சதாசிவமூர்த்தியின் பெருமையை இன்னும் எண்ணிப் பார்த்ததில்லை. அடிமுடி காண முடியாத அந்த சதாசிவமூர்த்தியை அளந்து பார்த்தவர் ஒருவரும் இல்லை. கண்ணால் காணக்கூடிய எதையும் கடந்து, அளவிட முடியாமல், அனைத்தையும் தன்னுள் அடக்கி அவன் நிற்கின்றான்.

Thirumal, who measured the three worlds with three steps, and Brahma seated on the lotus flower, and all the other gods besides, have still not managed even to think about the greatness of Sadasivamurthy, which cannot be measured by thought at all. No one has ever measured that Sadasivamurthy, whose beginning and end cannot be found. He stands beyond anything the eye can see, beyond all measure, holding everything within himself.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    மூவுலகையும் மூன்று அடிகளால் அளந்த திருமாலும், தாமரை மலரில் அமர்ந்த பிரம்மனும் முதலான அனைத்துத் தேவர்களும்,

    Thirumal, who measured the three worlds with three steps, and Brahma seated on the lotus flower, and all the other gods besides,

  • வரி 2

    தங்கள் எண்ணத்தால் கூட அளக்க முடியாத சதாசிவமூர்த்தியின் பெருமையை இன்னும் எண்ணிப் பார்த்ததில்லை.

    have still not managed even to think about the greatness of Sadasivamurthy, which cannot be measured by thought at all.

  • வரி 3

    அடிமுடி காண முடியாத அந்த சதாசிவமூர்த்தியை அளந்து பார்த்தவர் ஒருவரும் இல்லை.

    No one has ever measured that Sadasivamurthy, whose beginning and end cannot be found.

  • வரி 4

    கண்ணால் காணக்கூடிய எதையும் கடந்து, அளவிட முடியாமல், அனைத்தையும் தன்னுள் அடக்கி அவன் நிற்கின்றான்.

    He stands beyond anything the eye can see, beyond all measure, holding everything within himself.

திருமந்திரம் பாடல் #13

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com