திருமூலர் | Thirumoolar

திருமூலர் அருளிய
திருமந்திரம் 102

பாயிரம்குரு மட வரலாறு

தொடர்ந்து படிக்கread this section continuously

கலந்தருள் காலாங்கர் தம்பால் அகோரர்நலந்தரு மாளிகைத் தேவர்நா தாந்தர்புலங்கொள் பரமானந் தர்போக தேவர்நிலந்திகழ் மூலர் நிராமயத் தோரே.

உரை · meaning

திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்), அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர், நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர், அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர், புலன்களை வென்ற பரமானந்தர், போக தேவர் (போகர்), இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச் செய்த திருமூலர், ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சும நிலை பெற்றவர்கள்.

Kalangar, called Kalangi Nathar, who graciously blends his own grace with the guru's grace, and Agorar, who can draw everyone to himself, Thirumaligai Devar, who grants good, and Nathanthar, who praises the Lord over all things, Paramanandar, who conquered the senses, and Bhoga Devar, called Bhogar, and Thirumoolar, who gave the ways to reach God and made the beings of this earth flourish, we seven, by the grace of God, have each attained the subtle state that never dies.

வரி வாரியாக · line by line

  • வரி 1

    திருவருளும் குருவருளும் கலந்து அருளும் காலாங்கர் (காலாங்கி நாதர்), அனைவரையும் தம்பால் ஈர்க்கவல்ல அகோரர்,

    Kalangar, called Kalangi Nathar, who graciously blends his own grace with the guru's grace, and Agorar, who can draw everyone to himself,

  • வரி 2

    நன்மைகளைத் தரும் திருமாளிகைத் தேவர், அனைத்திற்கும் தலைவனான நாதனைப் போற்றும் நாதாந்தர்,

    Thirumaligai Devar, who grants good, and Nathanthar, who praises the Lord over all things,

  • வரி 3

    புலன்களை வென்ற பரமானந்தர், போக தேவர் (போகர்),

    Paramanandar, who conquered the senses, and Bhoga Devar, called Bhogar,

  • வரி 4

    இறைவனை அடையும் வழிகளை வழங்கி மண்ணுலக உயிர்களைத் திகழச் செய்த திருமூலர், ஆகிய நாங்கள் ஏழு பேரும் இறைவனின் அருளால் என்றும் இறவா சூட்சும நிலை பெற்றவர்கள்.

    and Thirumoolar, who gave the ways to reach God and made the beings of this earth flourish, we seven, by the grace of God, have each attained the subtle state that never dies.

திருமந்திரம் பாடல் #102

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com