தொடர்ந்து படிக்கread this section continuously
சேருறு காலந் திசைநின்ற தேவர்கள்ஆரிவன் என்ன அரனாம் இவனென்னஏருறு தேவர்கள் எல்லாம் எதிர்கொள்ளக்காருறு கண்டனை மெய்கண்ட வாறே.
உரைmeaning
பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள், இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில் சிவரூபம் பெற்று விளங்குவார்கள். அப்போது எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவர் என்று ஆச்சரியத்துடன் எதிர்கொண்டு வரவேற்று, அவர் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானையே தேவர்கள் தரிசிப்பார்கள்.
Those who withdraw the mind that wanders outward and meditate inwardly, by the way of pratyahara, come to shine in the very form of Shiva when they reach the Lord's sacred feet. Then the gods who stand as lords of the eight directions come forward in wonder asking who this is, and welcome them, and the gods behold Shiva, the blue-throated one, truly present within that body.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிரத்தியாகாரம் மூலம் வெளியே செல்லும் மனதை உள்ளே நிறுத்தித் தியானம் செய்தவர்கள் இறைவனின் திருவடியைச் சேரும் காலத்தில்,
When those who withdraw the outward-wandering mind and meditate inwardly, by the way of pratyahara, reach the Lord's sacred feet,
- வரி 2Line 2
சிவரூபம் பெற்று விளங்குவதால், எட்டுத் திசைகளுக்கும் அதிபதியாக நிற்கும் தேவர்கள் யாரிவன் என்று ஆச்சரியப்படுவார்கள்.
they come to shine in the very form of Shiva, and the gods who stand as lords of the eight directions wonder who this is.
- வரி 3Line 3
அழகுறு தேவர்கள் அனைவரும் எதிர்கொண்டு வரவேற்பார்கள்.
All the resplendent gods come forward and welcome them.
- வரி 4Line 4
அவர் உடலில் நீலகண்டனாகிய சிவபெருமானையே தேவர்கள் தரிசிப்பார்கள்.
And the gods behold Shiva, the blue-throated one, truly present within that body.
திருமந்திரம் பாடல் #636





