தொடர்ந்து படிக்கread this section continuously
செம்பொற் சிவகதி சென்றெய்துங் காலத்துக்கும்பத் தமரர் குழாம்வந் தெதிர்கொள்ளஎம்பொற் றலைவன் இவனா மெனச்சொல்லஇன்பக் கலவி இருக்கலு மாமே.
உரைmeaning
பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் செம்பொன் போன்ற சிவகதியைச் சென்றடையும் காலத்தில், பூரண கும்பத்துடன் தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து, பொன் போலப் போற்றத்தக்க எங்கள் தலைவர் இவரே என்று சொல்லி வரவேற்பார்கள். அவர்களுடன் இன்பத்தில் கலந்திருப்பார்கள்.
When those who meditate by the way of pranayama go and reach the pure, golden Shivagati, the gods come forward as a crowd bearing the full pot and, saying this is our golden and venerable lord, welcome them. And they remain merged in bliss with them.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிராணாயாம முறைப்படி தியானம் செய்தவர்கள் செம்பொன் போன்ற சிவகதியைச் சென்றடையும் காலத்தில்,
At the time when those who meditate by the way of pranayama go and reach the pure, golden Shivagati,
- வரி 2Line 2
பூரண கும்பத்துடன் தேவர்கள் கூட்டமாக எதிரே வந்து,
the gods come forward as a crowd bearing the full pot,
- வரி 3Line 3
பொன் போலப் போற்றத்தக்க எங்கள் தலைவர் இவரே என்று சொல்லி வரவேற்பார்கள்.
saying, this is our golden and venerable lord, and welcome them.
- வரி 4Line 4
அவர்களுடன் இன்பத்தில் கலந்திருப்பார்கள்.
And they remain merged in bliss with them.
திருமந்திரம் பாடல் #635





