திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 551

மூன்றாம் தந்திரம்1. அட்டாங்க யோகம்

தொடர்ந்து படிக்கread this section continuously

அந்நெறி இந்நெறி என்னாதட் டாங்கந்தன்நெறி சென்று சமாதியி லேநின்மின்நன்னெறி செல்வார்க்கு ஞானத்தி லேகலாம்புன்னெறி யாகத்திற் போக்கில்லை யாகுமே.

உரை

இறைவனை அடைய நாம் செல்லும் வழி நன்றானதா, இல்லை வேறு வழி நன்றானதா என்று சந்தேகப்படாமல், எந்த வழிக்கும் தேவைப்படுகின்ற அட்டாங்க யோகங்களின் வழியிலே சென்று சமாதி நிலையில், அதாவது இறைவனை நினைத்துத் தன்னை மறந்திருக்கும் நிலையில், இருங்கள். இத்தகைய நல்ல வழியில் செல்பவர்களுக்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு அடைவது மட்டுமல்லாமல், அந்த ஞானத்தின் பயனாக இனிப் பிறவி என்பதும் இல்லை.

வரி வாரியாக

  • வரி 1

    இறைவனை அடைய நாம் செல்லும் வழி நன்றானதா, இல்லை வேறு வழி நன்றானதா என்று சந்தேகப்படாமல்,

  • வரி 2

    எந்த வழிக்கும் தேவைப்படுகின்ற அட்டாங்க யோகங்களின் வழியிலே சென்று சமாதி நிலையில், அதாவது இறைவனை நினைத்துத் தன்னை மறந்திருக்கும் நிலையில், இருங்கள்.

  • வரி 3

    இத்தகைய நல்ல வழியில் செல்பவர்களுக்கு ஞான யோகம் கைகூடிச் சிவப்பேறு அடைவது மட்டுமல்லாமல்,

  • வரி 4

    அந்த ஞானத்தின் பயனாக இனிப் பிறவி என்பதும் இல்லை.

திருமந்திரம் பாடல் #551

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout