தொடர்ந்து படிக்கread this section continuously
ஓலக்கஞ் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்பாலொத்த மேனியன் பாதம் பணிந்துய்யமாலுக்கும் ஆதிப் பிரமற்கும் மன்னவன்ஞாலத் திவன்மிக நல்லனென் றாரே.
உரைmeaning
சிவபெருமானின் திருச்சபையைச் சுற்றி நிற்கும் அழிவில்லாத தேவர்கள், பாலைப் போன்ற வெண்ணிற உடலுடைய அவரது திருவடியை வணங்கி, முக்தி பெறவேண்டி பொறுமையுடன் காத்திருப்பார்கள். அப்படி பொறுமையுடன் காத்திருக்கும் அந்தத் தேவர்களை, திருமாலுக்கும் ஆதிப் பிரமனுக்கும் மன்னராக இருக்கும் சதாசிவமூர்த்தி, உலகத்திலேயே மிகவும் நல்லவர்கள் என்று அருளினார்.
The imperishable devas who stand around Shiva's holy assembly bow at his feet, his body white as milk, and wait patiently to attain liberation. Sadasivamurthy, who is king to Vishnu and to the primal Brahma, declared of those devas who wait so patiently that they are the very best in all the world.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
திருச்சபையைச் சுற்றி நிற்கும் அழிவில்லாத தேவர்கள்,
The imperishable devas who stand around the holy assembly,
- வரி 2Line 2
பாலைப் போன்ற வெண்ணிற உடலுடையவரின் திருவடியை, முக்தி பெறவேண்டி வணங்குவார்கள்.
bow at the feet of him whose body is white as milk, so as to attain liberation.
- வரி 3Line 3
திருமாலுக்கும் ஆதிப் பிரமனுக்கும் மன்னராக இருக்கும் சதாசிவமூர்த்தி,
Sadasivamurthy, who is king to Vishnu and to the primal Brahma,
- வரி 4Line 4
அந்தத் தேவர்கள் உலகத்திலேயே மிகவும் நல்லவர்கள் என்று அருளினார்.
declared of them that they are the very best in all the world.
திருமந்திரம் பாடல் #540





