திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 508

இரண்டாம் தந்திரம்17. அபாத்திரம்

தொடர்ந்து படிக்கread this section continuously

மண்மலை யத்தனை மாதனம் ஈயினும்அண்ணல் இவனென்று அஞ்சலி யத்தனாய்எண்ணி இறைஞ்சாதார்க் கீந்த இருவரும்நண்ணுவர் ஏழா நரகக் குழியிலே.

உரை

தம்மை ஆளுகின்ற தந்தையான இறைவனே மனித வடிவில் வந்து தானம் கொடுக்கின்றான் என்று கைகூப்பித் தொழுது, இறைவனை நினைத்துத் தானம் கேட்காதவர்களுக்கு மலையளவு மாபெரும் பொருளைத் தானமாகத் தந்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது. இறைவனை நினைக்காமல் தானம் கொடுத்தவனும், இறைவனை நினைக்காமல் தானம் பெற்ற இருவருமே ஏழு வித நரகங்களின் குழியைச் சென்று அடைவார்கள்.

வரி வாரியாக

  • வரி 1

    தம்மை ஆளுகின்ற தந்தையான இறைவனே மனித வடிவில் வந்து தானம் கொடுக்கின்றான் என்று கைகூப்பித் தொழுது,

  • வரி 2

    இறைவனை நினைத்துத் தானம் கேட்காதவர்களுக்கு,

  • வரி 3

    மலையளவு மாபெரும் பொருளைத் தானமாகத் தந்தாலும் அதனால் ஒரு பயனும் கிடையாது.

  • வரி 4

    இறைவனை நினைக்காமல் தானம் கொடுத்தவனும், இறைவனை நினைக்காமல் தானம் பெற்றவனும், இருவருமே ஏழு வித நரகங்களின் குழியைச் சென்று அடைவார்கள்.

திருமந்திரம் பாடல் #508

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout