திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 431

தொடர்ந்து படிக்கread this section continuously

உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியைஉள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனைஉள்ளமுந் தானும் உடனே இருக்கினும்உள்ளம் அவனது உருவறி யாதே.

உரை

ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக்கூடிய ஜோதி வடிவமாக இறைவன் வீற்றிருக்கின்றான். அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூடத் தள்ளி நிற்பதில்லை. இவ்வாறு எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனேயே இறைவன் இருந்தாலும், மாயையால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியவே அறியாது.

வரி வாரியாக

  • வரி 1

    ஒவ்வொரு உயிரின் உள்ளத்திற்குள்ளும் கண்டு உணரக்கூடிய ஜோதி வடிவமாக இறைவன் வீற்றிருக்கின்றான்.

  • வரி 2

    அவன் உயிர்களின் உள்ளத்தை விட்டு ஒரு அடி கூடத் தள்ளி நிற்பதில்லை.

  • வரி 3

    இவ்வாறு எப்போதும் உயிர்களின் உள்ளத்துடனேயே இறைவன் இருந்தாலும்,

  • வரி 4

    மாயையால் மறைக்கப்பட்ட உயிர்களின் உள்ளம் அவனது உருவத்தை அறியவே அறியாது.

திருமந்திரம் பாடல் #431

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout