தொடர்ந்து படிக்கread this section continuously
தானொரு காலந் தனிச்சுட ராய்நிற்கும்தானொரு கால்சண்ட மாருத மாய்நிற்கும்தானொரு காலந் தளிமழை யாய்நிற்கும்தானொரு காலந்தண் மாயவனு மாமே.
உரைmeaning
இறைவன் ஒருவனே ஆதிகாலத்திலிருந்தே மாபெரும் தனிச்சுடர் கொண்ட பேரொளியாய் நிற்கின்றான். அழிக்கின்ற காலத்தில் சூராவளிப் புயலாக இருக்கின்றான். உயிர்களை வாழ்விக்கின்ற காலத்தில் குளிர்ச்சியுடைய மழையாய் வருகின்றான். காலத்திற்கு ஏற்ப உருவம் கொண்டு உயிர்களைக் காப்பாற்றும் திருமாலின் தன்மையாகவும் அவனே இருக்கின்றான்.
It is the one God who, from the very first age, stands as a great light with a peerless flame all its own. In the time of destruction he is a raging cyclone. In the time when he sustains souls in life he comes as a cool rain. And he himself is also the nature of Vishnu, who takes on forms suited to the time to save souls.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
இறைவன் ஒருவனே ஆதிகாலத்திலிருந்தே மாபெரும் தனிச்சுடர் கொண்ட பேரொளியாய் நிற்கின்றான்.
It is the one God who, from the very first age, stands as a great light with a peerless flame all its own.
- வரி 2Line 2
அழிக்கின்ற காலத்தில் சூராவளிப் புயலாக இருக்கின்றான்.
In the time of destruction he is a raging cyclone.
- வரி 3Line 3
உயிர்களை வாழ்விக்கின்ற காலத்தில் குளிர்ச்சியுடைய மழையாய் வருகின்றான்.
In the time when he sustains souls in life he comes as a cool rain.
- வரி 4Line 4
காலத்திற்கு ஏற்ப உருவம் கொண்டு உயிர்களைக் காப்பாற்றும் திருமாலின் தன்மையாகவும் அவனே இருக்கின்றான்.
And he himself is also the nature of Vishnu, who takes on forms suited to the time to save souls.
திருமந்திரம் பாடல் #415





