திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 377

இரண்டாம் தந்திரம்8. அடிமுடி தேடல்

தொடர்ந்து படிக்கread this section continuously

தானக் கமலத் திருந்த சதுமுகன்தானக் கருங்கட லூழித் தலைவனும்ஊனத்தின் உள்ளே உயிர்போல் உணர்கின்றதானப் பெரும்பொருள் தன்மையது ஆமே.

உரை

நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரமனும், கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும், ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும், உயிர்களினுடைய உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடன் கலந்திருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்களாக ஆகமுடியாது.

வரி வாரியாக

  • வரி 1

    நான்கு முகங்களோடு தாமரை மலரை இருப்பிடமாகக் கொண்டு அமர்ந்திருக்கும் பிரமனும்,

  • வரி 2

    கருமையான நிறத்தோடு பாற்கடலை இருப்பிடமாகக் கொண்டு படுத்திருக்கும் திருமாலும்,

  • வரி 3

    ஊழிக்காலத்தில் அழிவின் தலைவனாக இருக்கும் உருத்திரனும்,

  • வரி 4

    உயிர்களினுடைய உடலாகவும் உயிராகவும் உயிரின் உணர்வாகவும் உயிர்களுடன் கலந்திருக்கும் மாபெரும் பரம்பொருளாகிய சதாசிவமூர்த்தியின் தன்மையை ஒத்தவர்களாக ஆகமுடியாது.

திருமந்திரம் பாடல் #377

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout