தொடர்ந்து படிக்கread this section continuously
ஊனாய் உயிராய் உணர்வங்கி யாய்முன்னம்சேணாய்வா னோங்கி திருவுரு வாய்அண்டத்தாணுவும் ஞாயிறும் தண்மதி யுங்கடந்தாண்முழுது அண்டமு மாகிநின் றானே.
உரைmeaning
சதாசிவமூர்த்தியாகிய இறைவன் ஒருவனே, அனைத்து உயிர்களினுடைய உடம்பாகவும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளிருக்கும் நெருப்பாகவும் இருக்கின்றான். மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி நின்ற தீப்பிழம்பு உருவமாகவும், அண்டங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் தூணாகவும், சூரியனாகவும், குளிர்ந்த சந்திரனாகவும் இருந்து, பரவியிருக்கின்ற அண்டங்கள் மொத்தமும் தானாகவே ஆகி நிற்கின்றான்.
God, who is Sadashivamurthi, alone is the body, the life, the awareness, and the indwelling fire of all beings. He stands as the form of a pillar of flame rising up between earth and sky, as the pillar that bears up all the worlds, as the sun, and as the cool moon, and he himself becomes and remains all the countless worlds that are spread out.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
சதாசிவமூர்த்தியாகிய இறைவன் ஒருவனே, அனைத்து உயிர்களினுடைய உடம்பாகவும் உயிராகவும் உணர்வாகவும் உள்ளிருக்கும் நெருப்பாகவும் இருக்கின்றான்.
God, who is Sadashivamurthi, alone is the body, the life, the awareness, and the indwelling fire of all beings.
- வரி 2Line 2
மண்ணுக்கும் விண்ணுக்கும் ஓங்கி நின்ற தீப்பிழம்பு உருவமாகவும் இருக்கின்றான்.
He stands as the form of a pillar of flame rising up between earth and sky.
- வரி 3Line 3
அண்டங்கள் அனைத்தையும் தாங்கி நிற்கும் தூணாகவும், சூரியனாகவும், குளிர்ந்த சந்திரனாகவும் இருக்கின்றான்.
He is the pillar that bears up all the worlds, the sun, and the cool moon.
- வரி 4Line 4
பரவியிருக்கின்ற அண்டங்கள் மொத்தமும் தானாகவே ஆகி நிற்கின்றான்.
And he himself becomes and remains all the countless worlds that are spread out.
திருமந்திரம் பாடல் #374





