தொடர்ந்து படிக்கread this section continuously
கருவரை மூடிக் கலந்தெழும் வெள்ளத்திருவருங் கோவென் றிகல இறைவன்ஒருவனும் நீருற ஓங்கொளி யாகிஅருவரை யாய்நின் றருள் புரிந் தானே.
உரைmeaning
பிரளய வெள்ளத்தில் பெரிய மலைகளும் நீரில் மூழ்கின. உலகெங்கும் படைத்தல் தொழில் நின்றுபோனது. அந்நேரம் பிரம்மனும் திருமாலும் தத்தம் கடமையைச் செய்யாமல், யாமே தலைவர் என்று ஒருவருக்கொருவர் மாறுபட்டு வாதிட்டுக்கொண்டனர். சதாசிவமூர்த்தியான இறைவன் பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று, வெள்ள நீர் அனைத்தும் வற்றிப்போகச் செய்தார். சதாசிவமூர்த்தியின் ஆற்றலைக் கண்ட பிரம்மனும் திருமாலும் தலைவன் யார் என்பதை உணர்ந்தனர். தம் தவற்றை உணர்ந்த அவர்களுக்கு, சதாசிவமூர்த்தி நெருப்பு மலையாகவே நின்று அருள் செய்தார்.
In the pralaya flood even the great mountains were submerged in the water. The work of creation stopped everywhere in the world. At that time Brahma and Vishnu, neglecting their own duties, argued with one another, each declaring, I alone am the lord. Sadashivamurthi, the Lord, stood as a mountain of fire filled with great light, and made all the flood water dry up. Seeing Sadashivamurthi's power, Brahma and Vishnu came to realize who the true lord was. To them, once they realized their fault, Sadashivamurthi, still standing as the mountain of fire, granted his grace.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பிரளய வெள்ளத்தில் பெரிய மலைகளும் நீரில் மூழ்கின; உலகெங்கும் படைத்தல் தொழில் நின்றுபோனது.
In the pralaya flood even the great mountains were submerged in the water, and the work of creation stopped everywhere in the world.
- வரி 2Line 2
பிரம்மனும் திருமாலும் தத்தம் கடமையைச் செய்யாமல், யாமே தலைவர் என்று ஒருவருக்கொருவர் வாதிட்டுக்கொண்டனர்.
Brahma and Vishnu, neglecting their own duties, argued with one another, each declaring, I alone am the lord.
- வரி 3Line 3
சதாசிவமூர்த்தியான இறைவன் பேரொளி மிகுந்த நெருப்பு மலையாக நின்று, வெள்ள நீர் அனைத்தும் வற்றிப்போகச் செய்தார்.
Sadashivamurthi, the Lord, stood as a mountain of fire filled with great light, and made all the flood water dry up.
- வரி 4Line 4
சதாசிவமூர்த்தியின் ஆற்றலைக் கண்டு தலைவன் யார் என்பதை உணர்ந்த அவர்களுக்கு, அவரே நெருப்பு மலையாக நின்று அருள் செய்தார்.
Seeing Sadashivamurthi's power and realizing who the true lord was, he, still standing as the mountain of fire, granted them his grace.
திருமந்திரம் பாடல் #362





