திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 353

இரண்டாம் தந்திரம்4. தக்கன் வேள்வி

தொடர்ந்து படிக்கread this section continuously

தந்தைபி ரான்வெகுண் டான்தக்கன் வேள்வியைவெந்தழல் ஊடே புறப்பட விண்ணவர்முந்திய பூசை முடியார் முறைகெட்டுச்சிதைந்தனர் அண்ணல் சினஞ்செய்த போதே.

உரை

அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் இறைவனுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தைத் தராமலும், அவரை மதிக்காமலும், இறைவனை அழிக்கும் நோக்கத்துடன் ஒரு மாபெரும் யாகத்தைச் செய்தான் தக்கன். அவனது அறியாமையைக் கண்டு சினம்கொண்ட ஈசன், அந்த யாகத்தையும் அவனது செருக்கையும் அழித்து அவனுக்கு நல்லறிவு கொடுக்க, மறக்கருணையுடன் வீரபத்திரர் எனும் பைரவ அவதாரமாக அந்த மாபெரும் யாகத் தீயிலிருந்து வெளிப்பட்டார். அந்த மாபெரும் யாகத்தைச் செய்தவர்களும், அதை ஏற்க வந்த தேவர்களும், இறைவனின் கோப முகத்தைக் கண்ட மறுகணமே, அவனது அருள் இன்றி அந்த யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதை அறிந்தனர். இறைவனின் கோபத்தைக் கண்டு மிகவும் அஞ்சி, தம் நிலை தடுமாறி எல்லாத் திசைகளிலும் சிதைந்தோடினார்கள்.

தாம் செய்யும் எந்தச் செயலானாலும், மனம், வாக்கு, உடம்பு மூன்றையும் ஒருநிலைப்படுத்தி இறையருளுடன் செய்வதே வேள்வி. மனம், வாக்கு, உடம்பு மூன்றை மட்டுமே வைத்து இறையருள் இன்றிச் செய்வது தக்கன் வேள்வியாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    அனைத்து உயிர்களுக்கும் தந்தையாகவும் தலைவனாகவும் இருக்கும் இறைவனுக்குத் தரவேண்டிய அவிர்பாகத்தைத் தராமல், இறைவனை அழிக்கும் நோக்கத்துடன் தக்கன் ஒரு மாபெரும் யாகத்தைச் செய்தான்.

  • வரி 2

    அவனது அறியாமையைக் கண்டு சினம்கொண்ட ஈசன், மறக்கருணையுடன் வீரபத்திரர் எனும் பைரவ அவதாரமாக அந்த யாகத் தீயிலிருந்து வெளிப்பட்டார்.

  • வரி 3

    யாகத்தைச் செய்தவர்களும் தேவர்களும், இறைவனின் கோப முகத்தைக் கண்ட மறுகணமே, அவனது அருள் இன்றி யாகத்தைப் பூர்த்தி செய்ய முடியாது என்பதை அறிந்தனர்.

  • வரி 4

    மிகவும் அஞ்சி எல்லாத் திசைகளிலும் சிதைந்தோடினார்கள். மனம் வாக்கு உடம்பு மூன்றையும் இறையருளுடன் செய்வதே வேள்வி; அருள் இன்றிச் செய்வது தக்கன் வேள்வியாகும்.

திருமந்திரம் பாடல் #353

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout