தொடர்ந்து படிக்கread this section continuously
திரிகின்ற முப்புரஞ் செற்ற பிரானைஅரியனென் றெண்ணி அயர்வுற வேண்டாபுரிவுடை யாளர்க்குப் பொய்யலன் ஈசன்பரிவொடு நின்று பரிசறி வானே.
உரைmeaning
எல்லா உயிர்களிடமும் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன், கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிச் சோர்ந்துபோக வேண்டாம். உண்மையான அன்புடன் தம்மைப் பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்லன். பாடல் #347ல் உள்ளபடி, தமக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் பேரன்புடனும் பெருங்கருணையுடனும் நின்று, அவர்களது பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.
Do not despair, thinking that Lord Isha, who graciously destroys the three impurities of anavam, kanmam and mayai present in every soul, is very hard to attain. Isha is not false to devotees who worship him with true love. As in verse 347, he stands close, with great love and great compassion, beside devotees who worship him lovingly, having realized within themselves his linga form and his linga thathuvam, and grants each the gift fitting their devotion.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
எல்லா உயிர்களிடமும் இருக்கும் மும்மலங்களை அழித்து அருளும் எம்பெருமான் ஈசன், கிடைப்பதற்கு மிகவும் அரிதானவன் என்று எண்ணிச் சோர்ந்துபோக வேண்டாம்.
Do not despair, thinking that Lord Isha, who graciously destroys the three impurities present in every soul, is very hard to attain.
- வரி 2Line 2
உண்மையான அன்புடன் தம்மைப் பூஜிக்கும் அடியவர்களுக்கு ஈசன் பொய்யானவன் அல்லன்.
Isha is not false to devotees who worship him with true love.
- வரி 3Line 3
பாடல் #347ல் உள்ளபடி, தமக்குள்ளேயே லிங்க உருவத்தையும் லிங்க தத்துவத்தையும் உணர்ந்து அன்போடு பூஜிக்கும் அடியவர்களின் அருகில் அவன் நிற்கிறான்.
As in verse 347, he stands close beside devotees who worship him lovingly, having realized within themselves his linga form and his linga thathuvam.
- வரி 4Line 4
பேரன்புடனும் பெருங்கருணையுடனும் நின்று, அவர்களது பக்திக்கு ஏற்ற பரிசை அருளுவான்.
He stands with great love and great compassion, and grants each devotee the gift fitting their devotion.
திருமந்திரம் பாடல் #348





