தொடர்ந்து படிக்கread this section continuously
தத்துவம் நீக்கி மருள்நீக்கித் தானாகிப்பொய்த்தவம் நீக்கிமெய்ப் போகத்துட் போகியேமெய்த்த சகமுண்டு விட்டுப் பரானந்தச்சித்திய தாக்கும் சிவானந்தத் தேறலே.
உரைmeaning
பாடல் #331ல் உள்ளபடி சிவானந்தத் தேனை அருந்தினால், உயிர்கள் உடம்பில் வாழ இறைவனால் கொடுக்கப்பட்ட 96 தத்துவங்கள் நீங்கும். அவை அனைத்தும் தன்னுடையது என்று எண்ணும் மாயைகள் நீங்கும். உலக இன்பங்களைப் பெற எண்ணிப் பொய்யான தவங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீங்கும். இந்த உலகைப் பற்றிய நினைப்பு ஒழிந்து, தமக்குள் சிவபோகமாகிய என்றும் அழியாத உண்மை வீட்டில் பேரானந்த மயக்கத்துள் இருக்கலாம்.
If one drinks the honey of Sivananda as described in verse 331, the ninety-six tattvas given by God for souls to live in the body will fall away. The illusions of thinking all of them one's own will fall away. The thought that false penances must be performed in the hope of gaining worldly pleasures will fall away. And with all thought of this world ended, one may abide within oneself in the rapture of great bliss, in the true and never-perishing house that is Sivabhogam.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #331ல் உள்ளபடி சிவானந்தத் தேனை அருந்தினால், உயிர்கள் உடம்பில் வாழ இறைவனால் கொடுக்கப்பட்ட 96 தத்துவங்கள் நீங்கும்; அவை அனைத்தும் தன்னுடையது என்று எண்ணும் மாயைகளும் நீங்கும்.
If one drinks the honey of Sivananda as described in verse 331, the ninety-six tattvas given by God for souls to live in the body will fall away, and so will the illusions of thinking all of them one's own.
- வரி 2Line 2
உலக இன்பங்களைப் பெற எண்ணிப் பொய்யான தவங்கள் செய்ய வேண்டும் என்ற எண்ணம் நீங்கும்.
The thought that false penances must be performed in the hope of gaining worldly pleasures will fall away.
- வரி 3Line 3
இந்த உலகைப் பற்றிய நினைப்பு ஒழியும்.
All thought concerning this world will come to an end.
- வரி 4Line 4
தமக்குள் சிவபோகமாகிய என்றும் அழியாத உண்மை வீட்டில் பேரானந்த மயக்கத்துள் இருக்கலாம்.
And one may abide within oneself in the rapture of great bliss, in the true and never-perishing house that is Sivabhogam.
திருமந்திரம் பாடல் #334





