திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 326

முதல் தந்திரம்24. கள்ளுண்ணாமை

தொடர்ந்து படிக்கread this section continuously

காமமும் கள்ளும் கலதிகட் கேயாகும்மாமல முஞ்சம யத்துள் மயலுறும்போமதி யாகும் புனிதன் இணையடிஓமய ஆனந்தத் தேறல் உணர்வுண்டே.

உரை

காமமும் போதை தரும் மதுவும் கீழ்த்தரமான மனிதர்களுக்கே உரியது. மதுவினால் மிகப்பெரிய அழுக்காகிய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால், நம்மையே உணர முடியாத அளவுக்கு அறிவு எல்லா நேரத்திலும் மயங்கிக் கிடக்கும். நாளடைவில் அறிவு அழிந்தே போகும். எப்போதும் பேரானந்த உணர்வைத் தரும் இறைவனின் திருவடிகள் போலவே பேரானந்தத்தைத் தரும் அமிர்தத்தைப் பெற்று அருந்துவது, மேன்மையான மனிதர்கள் செய்யும் செயலாகும்.

வரி வாரியாக

  • வரி 1

    காமமும் போதை தரும் மதுவும் கீழ்த்தரமான மனிதர்களுக்கே உரியது.

  • வரி 2

    மதுவினால் மிகப்பெரிய அழுக்காகிய ஆணவம் அதிகரிக்கும். ஆணவம் மிகுந்தால், நம்மையே உணர முடியாத அளவுக்கு அறிவு எல்லா நேரத்திலும் மயங்கிக் கிடக்கும்.

  • வரி 3

    நாளடைவில் அறிவு அழிந்தே போகும்.

  • வரி 4

    எப்போதும் பேரானந்த உணர்வைத் தரும் இறைவனின் திருவடிகள் போலவே பேரானந்தத்தைத் தரும் அமிர்தத்தைப் பெற்று அருந்துவது, மேன்மையான மனிதர்கள் செய்யும் செயலாகும்.

திருமந்திரம் பாடல் #326

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout