தொடர்ந்து படிக்கread this section continuously
நடுவுநின் றான்நல்ல கார்முகில் வண்ணன்நடுவுநின் றான்நல்ல நான்மறை ஓதிநடுவுநின் றார்சிலர் ஞானிக ளாவோர்நடுவுநின் றார்நல்ல நம்பனும் ஆமே.
உரைmeaning
பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே, பின்பு உலகத்தைக் காக்கும் திருமாலாகவும், உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள். அவர்களுள் சிலர் சிறந்த ஞானியாகிச் சிவமாகவே மாறிவிடுவார்கள்.
Those who stand in the even state described in verse 320 and so attain wisdom are the ones who later become Thirumal, who protects the world, and Brahman, who creates the living beings. Some among them become excellent gnanis and turn into Sivam itself.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
பாடல் #320ல் உள்ளபடி நடுநிலையுடன் இருந்து ஞானம் அடைந்தவர்களே, பின்பு உலகத்தைக் காக்கும் திருமாலாக மாறுவார்கள்.
Those who stand in the even state described in verse 320 and so attain wisdom are the ones who later become Thirumal, who protects the world.
- வரி 2Line 2
அவர்களே உயிர்களைப் படைக்கும் பிரம்மனாகவும் மாறுவார்கள்.
They also become Brahman, who creates the living beings.
- வரி 3Line 3
நடுநிலையுடன் நின்றவர்களுள் சிலர் சிறந்த ஞானியாக ஆவார்கள்.
Some among those who have stood in the even state become excellent gnanis.
- வரி 4Line 4
அவ்வாறு ஆனவர்கள் சிவமாகவே மாறிவிடுவார்கள்.
And those who so become turn into Sivam itself.
திருமந்திரம் பாடல் #321





