திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 287

முதல் தந்திரம்19. அன்பு செய்வாரை அறிவன் சிவன்

தொடர்ந்து படிக்கread this section continuously

முன்பு பிறப்பும் இறப்பும் அறியாதார்அன்பில் இறைவனை யாமறி வோமென்பர்இன்பப் பிறப்பும் இறப்பும் இலான்நந்திஅன்பில் அவனை அறியவுமி லாரே.

உரை

தாம் முன்பு எடுத்த பிறவியையும், அந்தப் பிறவியில் இறந்த விதத்தையும் அறியாத உயிர்கள், தாம் கொண்ட சிற்றின்ப அன்பிலேயே இறைவனைத் தெரிந்து கொண்டோம் என்று சொல்லுவார்கள். பேரின்பத்தையும் கொடுத்து பிறவியில்லாத வாழ்வைக் கொடுப்பவன், பிறப்பும் இறப்பும் இல்லாத இறைவன். அவனைத் தூய்மையான அன்பின் மூலம் அறிந்து கொள்ளாமல் இவர்கள் இருக்கின்றார்களே!

வரி வாரியாக

  • வரி 1

    தாம் முன்பு எடுத்த பிறவியையும், அந்தப் பிறவியில் இறந்த விதத்தையும் அறியாத உயிர்கள்,

  • வரி 2

    தாம் கொண்ட சிற்றின்ப அன்பிலேயே இறைவனைத் தெரிந்து கொண்டோம் என்று சொல்லுவார்கள்.

  • வரி 3

    பேரின்பத்தையும் கொடுத்து பிறவியில்லாத வாழ்வைக் கொடுப்பவன், பிறப்பும் இறப்பும் இல்லாத இறைவன்.

  • வரி 4

    அவனைத் தூய்மையான அன்பின் மூலம் அறிந்து கொள்ளாமல் இவர்கள் இருக்கின்றார்களே!

திருமந்திரம் பாடல் #287

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout