திருமூலர்

திருமூலர் அருளிய
திருமந்திரம் 239

முதல் தந்திரம்13. இராசதோடம்

தொடர்ந்து படிக்கread this section continuously

நாடொறும் மன்னவன் நாட்டில் தவநெறிநாடொறும் நாடி அவன்நெறி நாடானேல்நாடொறும் நாடு கெடுமுட னண்ணுமால்நாடொறும் செல்வம் நரபதி குன்றுமே.

உரை

ஒரு நாட்டின் அரசன் அந்த நாடு முழுவதிலும் தினந்தோறும் தவ வழியில் வாழ்பவர்களுக்கு எத்தகைய துன்பமும் வராமல் காத்துக்கொள்ள வேண்டும். அரசனுக்கென விதிக்கப்பட்ட நீதியிலும் தர்மத்திலும் சிறிதும் பிழையாமல் தினந்தோறும் நடந்துகொள்ள வேண்டும். இதில் எதைத் தவறினாலும் அவனுடைய நாட்டின் வளம் குன்றும்; மக்களிடையே அறியாமை தோன்றும்; அந்த நாட்டின் செல்வங்கள் நாள்தோறும் குறைந்துகொண்டே வந்து அரசனும் விரைவில் மடிந்துபோவான்.

வரி வாரியாக

  • வரி 1

    ஒரு நாட்டின் அரசன் அந்த நாடு முழுவதிலும் தினந்தோறும் தவ வழியில் வாழ்பவர்களுக்கு எத்தகைய துன்பமும் வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

  • வரி 2

    அரசனுக்கென விதிக்கப்பட்ட நீதியிலும் தர்மத்திலும் சிறிதும் பிழையாமல் தினந்தோறும் நடந்துகொள்ள வேண்டும். இதைத் தவறினால் அந்நாடு தினந்தோறும் அழிவை நோக்கிச் செல்லும்.

  • வரி 3

    இதில் எதைத் தவறினாலும் அவனுடைய நாட்டின் வளம் குன்றும்; மக்களிடையே அறியாமை தோன்றும்.

  • வரி 4

    அந்த நாட்டின் செல்வங்கள் நாள்தோறும் குறைந்துகொண்டே வந்து அரசனும் விரைவில் மடிந்துபோவான்.

திருமந்திரம் பாடல் #239

0:000:00

❤️ உடன் முருகனுக்காக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! முருகா!!

© 2026 murugaa.com

creditsabout