தொடர்ந்து படிக்கread this section continuously
கல்லா அரசனும் காலனும் நேரொப்பர்கல்லா அரசனின் காலன் மிகநல்லன்கல்லா அரசன் அறம்ஓரான் கொல்என்பான்நல்லாரைக் காலன் நணுகவும்நில் லானே.
உரைmeaning
கல்வியறிவு இல்லாத அரசனும் உயிர் கவரும் வேலையில் யமதர்மனுக்குச் சமமானவன். ஆயினும் கல்வியறிவு இல்லாத அரசனை விட யமதர்மனே மிகவும் நல்லவன். ஏனெனில் கல்வியறிவு இல்லாத அரசன் எது அறம், எது நீதி என்று ஆராயாமல், குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கொன்றுவிடு என்று கட்டளையிட்டுவிடுவான். ஆனால் யமதர்மனோ நல்லவர்களை நெருங்கவும் தயங்கி, அவர்களுடைய காலம் முடியும்வரை காத்திருப்பான்.
An uneducated king is the equal of Yama, the god of death, in the work of taking life. Yet Yama is far better than an uneducated king. For an uneducated king, without enquiring what is righteous and what is just, will simply order that whoever is accused be killed at once. Yama, however, hesitates even to approach good people, and waits until their allotted time is truly over.
வரி வாரியாகline by line
- வரி 1Line 1
கல்வியறிவு இல்லாத அரசனும் உயிர் கவரும் வேலையில் யமதர்மனுக்குச் சமமானவன்.
An uneducated king is the equal of Yama, the god of death, in the work of taking life.
- வரி 2Line 2
ஆயினும் கல்வியறிவு இல்லாத அரசனை விட யமதர்மனே மிகவும் நல்லவன்.
Yet Yama is far better than an uneducated king.
- வரி 3Line 3
ஏனெனில் கல்வியறிவு இல்லாத அரசன் எது அறம், எது நீதி என்று ஆராயாமல், குற்றம் சாட்டப்பட்டவரை உடனே கொன்றுவிடு என்று கட்டளையிட்டுவிடுவான்.
For an uneducated king, without enquiring what is righteous and what is just, will simply order that whoever is accused be killed at once.
- வரி 4Line 4
ஆனால் யமதர்மனோ நல்லவர்களை நெருங்கவும் தயங்கி, அவர்களுடைய காலம் முடியும்வரை காத்திருப்பான்.
Yama, however, hesitates even to approach good people, and waits until their allotted time is truly over.
திருமந்திரம் பாடல் #238





